Skip to main content

நடிகையும், வேட்பாளரும் நடனமாடி ஓட்டு சேகரிப்பு! - குஷியில் பெண் வாக்காளர்கள்!

Published on 26/03/2021 | Edited on 26/03/2021

 

tn assembly election election campaign bjp leader


தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. வாக்காளர்களைக் கவர்வதற்காக ஒவ்வொரு கட்சியும், அதன் வேட்பாளர்களும் வித்தியாசமான, சுவாரஸ்யமான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் சினிமா பிரபலங்களை அதிக அளவில் களத்தில் இறக்கிவிட்டிருப்பது பா.ஜ.க.தான்! அந்த வகையில் அரவக்குறிச்சி தொகுதி தினம் தினம் குஷியில் மிதக்கிறது.

 

tn assembly election election campaign bjp leader

 

இந்த அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை. இவரை ஆதரித்து வாக்கு சேகரிக்க அரவக்குறிச்சியில் இரண்டு நாட்களாக முகாமிட்டுள்ளார் பிக்பாஸ் புகழ் நடிகை காயத்ரி ரகுராம். மத்தியிலுள்ள பா.ஜ.க. அரசு, தமிழகத்திற்குக் கொண்டு வந்துள்ள திட்டங்களைச் சொல்லி, அண்ணாமலைக்காக வாக்கு சேகரித்த காயத்ரி ரகுராம், ஒரு கட்டத்தில் கூட்டத்தில் திரண்டிருந்த பெண்களோடு ஜாலியாக நடனமாடினார். இதனால் அப்பகுதியே ஜாலி மூடுக்கு மாறியது. இந்த நிலையில், வாகனத்தில் நின்றிருந்த அண்ணாமலை கீழே இறங்கி வந்து, காயத்ரி ரகுராமுடனும் அங்கு குழுமியிருந்த பெண்களுடனும் இணைந்து நடனமாடினார். இதனால் அந்தப் பகுதியே கலகலப்பானது.

 

tn assembly election election campaign bjp leader

 

"சீரியஸாக நடந்து கொண்டிருக்கும் பிரச்சாரப் பயணங்களுக்கிடையே இப்படிப்பட்ட ரிலாக்சும் வேட்பாளர்களுக்குத் தேவைப்படுகிறது" என்கிறார்கள் பா.ஜ.க.வினர். வேட்பாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் நடன சுவாரஸ்யங்களை தொகுதிவாசிகள் ரசிக்கவே செய்கிறார்கள்.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.