ADVERTISEMENT

'கிள்ளியூர் வேட்பாளர் மாற்றம்' - டி.டி.வி.தினகரன் அறிவிப்பு!

09:23 PM Mar 15, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தலுடன், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 12- ஆம் தேதி தொடங்கியது. இதனால், தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்கள் இன்று (15/03/2021) வேட்பு மனுவைத் தாக்கல் செய்து, அனல் பறக்கும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் இன்று (15/03/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'அ.ம.மு.க.வின் ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06/04/2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக இரா.அண்ணாதுரை தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்கு வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த டாக்டர் மனோவா சாம் ஷாலன் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக அ.ம.மு.க. வேட்பாளராக சீமா அறிவிக்கப்படுகிறார்'. இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT