ADVERTISEMENT

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் நலம் பெற கூட்டுப் பிரார்த்தனை 

04:20 PM Mar 17, 2020 | rajavel



திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த 28 நாட்களாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஹாகின் பாக் என்கிற பெயரில் 24 மணி நேரமும் போராட்டம் நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

நாடு முழுவதும் கொரானா பரவலால் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி இஸ்லாமிய அமைப்புகள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்து அறிவித்தனர்.

ADVERTISEMENT

அதன்படி வாணியம்பாடி போராட்டமும் மார்ச் 17 ந்தேதி முடிவுக்கு வந்தது. அப்போது, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைப்பு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் குணமடையவும் மேலும் வைரஸ் பரவாமல் இருக்கவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுது பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT