Skip to main content

திருப்பத்தூர் நகராட்சி: நீயா? நானா? முட்டிமோதும் எம்.எல்.ஏ – நகர செயலாளர்! 

Published on 01/03/2022 | Edited on 01/03/2022

 

Tirupati Municipality MLA - City Secretary!

 

திருப்பத்தூர் நகர்மன்றத்தில் 36 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சியான திமுக 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 05 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பாமக, மதிமுக, காங்கிரஸ் தலா  ஓரிடம், சுயேட்சைகள் 5 இடங்கள் என வெற்றி பெற்றுள்ளன. அதிமுக வேட்பாளர்கள் 14 வார்டுகளில் டெபாசிட் இழந்து அதிமுக பிரமுகர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளார்கள்.

 

நகர் மன்றத் தலைவர் பதவியை கைப்பற்றி விட வேண்டும் என தேர்தல் அறிவிப்புக்கு முன்புவரை திருப்பத்தூர் நகரத்திலுள்ள திருப்பத்தூர் திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ நல்லதம்பி தரப்பு சிலர் முயற்சி செய்தனர். திருப்பத்தூர் நகரத்திலுள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்கள் யாரும் நகர்மன்றத் தலைவராக வந்துவிடக்கூடாது என்பதற்காக, நகர்மன்றத் தலைவர் பதவியை பட்டியலின பெண்கள் என ஒதுக்கப்பட்டது. இதனால் அனைத்து தரப்புமே அதிர்ச்சியானது. தனக்கு போட்டியாக யாரும் வளர்ந்துவிடக்கூடாது, பொருளாதார ரீதியாக யாரும் வளர்ந்துவிடக்கூடாது என திமுக மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏவான தேவராஜ் தான் இப்படி செய்தார் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. சேர்மன் பதவி பட்டியலின பெண்களுக்கு என்றதால் பெரியதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.

 

Tirupati Municipality MLA - City Secretary!

 

தேர்தல் முடிந்து ஆளுங்கட்சியான திமுக பெரியளவில் வெற்றி பெற்றுள்ளது. நான் முதலியார் சமூகம், என் மனைவி பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் இரண்டு சமூகத்தையும் அரவணைக்கும் விதமாக என் மனைவிக்கு சேர்மன் சீட் தாருங்கள் எனக் கேட்கிறார் நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஐய்யப்பன். கவுன்சிலர்களுக்கு தருவதற்காக ரூபாய் 2 கோடி தயாராகவுள்ளது என தன் பலத்தை காட்டியுள்ளார்.

 

திமுக நகரச் செயலாளர் ராஜேந்திரன், தான் போட்டியிட நினைத்த பொது வார்டில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த சங்கீதா என்பவரை நிறுத்தி வெற்றி பெற வைத்துள்ளார். நான் சேர்மனாகிவிடக்கூடாது என முடிவு செய்து சேர்மன் பதவியை பட்டியலினத்துக்கு ஒதுக்க வைத்தீர்கள். நகரத்தில் 30 வருடங்களாக கட்சியை கட்டுகோப்பாக வைத்திருக்கிறேன், கவுன்சிலர்களை வெற்றி பெறவைக்கிறேன், நான் சொல்லும் நபரைத்தான் சேர்மனாக்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ்யிடம் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கிறார்.

 

Tirupati Municipality MLA - City Secretary!

 

தொகுதி எம்.எல்.ஏ நல்லதம்பி, நகரச் செயலாளர் முன்னிறுத்தும் பெண்மணி கட்சி போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளாரா? எதுக்கு அவரை சேர்மனாக்கனும்? கட்சியைச் சேர்ந்த மூன்று பேர் வெற்றி பெற்றிருக்காங்க. அதிலிருந்து யாரையாவது செலக்ட் செய்யனும் என மாவட்ட செயலாளரிடம் கூறினாராம். இது எம்.எல்.ஏ மற்றும் நகரச் செயலாளர் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.

 

ஜவுளி தொழில் செய்யும் குடும்பத்தைச் சேர்ந்த சங்கீதாவும் 3 கோடி வரை சேர்மன் தேர்தலுக்காக செலவு செய்யத் தயார் என்றதால் சேர்மன் வேட்பாளராக அவரை தேர்வு செய்துவிட்டார்கள் என்கிறார்கள் திமுகவினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ரெய்டில் ரூ. 40 லட்சம் பறிமுதல்; திருப்பத்தூரில் பரபரப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
IT Raid Rs. 40 lakh forfeited; Busy in Tiruppathur

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் திருநாதர் முதலியார் என்ற பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ, ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி. ரமேஷின் அக்காள் மருமகன் ஆவார். இத்தகைய சூழலில் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது குறித்து வருமான வரித்துறையினருக்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நவீன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார். அப்போது ரூ. 40 லட்சம் ரொக்கம் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா என்ற கோணத்திலும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  வருமான வரித்துறை சோத்னையின் மூலம்  ரூ. 40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மாற்றுத்திறனாளி சிறுவனை தனியார் பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துநர்!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
conductor refused to board the differently-abled son in the private bus

திருப்பத்தூர் மாவட்டம், விசமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குப்தா. இவருடைய மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 14 வயதில் மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இவரை இன்று இவருடைய அம்மா வெண்ணிலா திருப்பத்தூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் விசமங்கலத்தில் உள்ள வீட்டிற்குச் செல்வதற்காக திருவண்ணாமலை செல்லும் தனியார் பேருந்தில் மாற்றுத்திறனாளியான மகனை ஏற்றி சீட்டில் உட்கார வைத்துள்ளார். அப்போது மாற்றுத்திறனாளி மகனைத் தனியார் பேருந்தின் நடத்துநர் கீழே இறக்கி விட்டுள்ளார். 

ஆத்திரம் அடைந்த அவரின் தாயார் வெண்ணிலா மற்றொரு பேருந்தில் விசமங்கலம் பகுதிக்கு வந்து சாலையில் கல்லை வைத்து கையில் பெட்ரோல் கேனுடன் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டார்.

conductor refused to board the differently-abled son in the private bus

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆய்வாளர் ரேகா மதி நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.