Skip to main content

அன்புமணி ராமதாஸ் முதல் அமைச்சராகக்கூடாது என்று நான் சொல்லவில்லை: திருமாவளவன் பேச்சு 

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

 

பொன்பரப்பியில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

Protest



இதில் பேசிய திருமாவளவன், ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுகவை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அது தானாக அழித்துவிடும். திமுகவை அழிக்க வேண்டும். திமுக, அதிமுகவை ஒழித்தால்தான் நாம் ஆட்சிக்கு வர முடியும் என்று ராமதாஸ் கூறினார். அதற்கு நான் உடன்படவில்லை. இதிலிருந்துதான் எனக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட்டது. திமுகவை அழிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஒரே நோக்கம். ராமதாஸின் உளவியல் எப்படிப்பட்டது என்பதை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. 
 

திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியோடு கொள்கை அளவில் நூறு விழுக்காடு பொருந்தி போகிறதா இல்லையா என்பது அல்ல. ஒரு கருத்தில் திமுக எங்களோடு உறுதியாக இருக்கிறது. சமூக நீதியை பாதுகாப்பதற்கு திமுகவோடு இருப்பு தேவை. கொள்கை ரீதியாக பல வேறுபாடுகள் இருக்கலாம். 
 

இதுதான் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது திமுகவை அழித்துவிட்டால் தனது மகனை முதல் அமைச்சராக்கிவிடலாம் என்று கனவு காண்கிறார். அவர் அடுத்த ஜென்மத்தில் கனவாகக்கூட அதனை பார்க்க முடியாது. நான் காழ்ப்புணர்ச்சியில் சொல்லவில்லை. நல்ல எண்ணத்தின் அடிப்படையில் ஒரு முயற்சியை செய்ய வேண்டும். 

 

அன்புமணி ராமதாஸ் முதல் அமைச்சராகக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஜனநாயகத்தில் ஆசைப்படுவதற்கு உரிமை இருக்கிறது. உங்கள் எண்ணம் நல்ல எண்ணமாக இல்லையே என்பதுதான். தனிப்பட்ட முறையில் நான் உங்களுக்கு என்ன பழி செய்தேன். என்ன குற்றம் இழைத்தேன். நான் நாடாளுமன்ற உறுப்பினராவதால் உங்களது வாய்ப்பு என்ன பறிபோகப்போகிறது. 
 

நான் என்ன உங்களைப்போன்று போட்டிப்போட்டுக்கொண்டு முதல் அமைச்சர், முதல் அமைச்சர் என்று வண்டியிலா ஏறுகிறேன். என்னையும் கைது செய்யுங்கள், என்னையும் கைது செய்யுங்கள். நானும் ரவுடிதான். நானும் ரவுடிதான் என்றா நான் சொல்லுகிறேன். நான் அந்தப் போட்டிக்கே வரவில்லையே. காலம் கனிந்தால், மக்கள் நினைத்தால் திருமாவளவனுக்கு தகுதி இருந்தால், திருமாவளவனுக்கு அந்த ஆற்றல் உண்டு என்று மக்கள் நம்பினால் அவர்கள் அந்த இடத்தில் அமர வைப்பார்கள். நானாக போட்டிப்போட்டுக்கொண்டு அந்த இடத்தில் நிற்க முடியுமா. 
 

நீங்கள் முதல் அமைச்சராகுங்கள். நான் வாழ்த்துகிறேன். நான் மக்களுக்கு தொண்டு செய்கிறேன். சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ குரல் கொடுக்க வாய்ப்பு கிடைத்தால் போதும் அவ்வளவுதான். பாமகவில் இருந்து உங்கள் சின்னய்யாவை அனுப்புங்கள். நான் எங்கள் கட்சியின் ஒன்றிய செயலாளரை அனுப்புகிறேன். கொள்கையைப் பற்றி பேசுவோம். வாக்குவாதத்திற்கு அல்ல. தமிழ் தேசியம் குறித்து, சமூக நீதி குறித்து பேச வேண்டும்.

டாக்டர் ராமதாஸைவிட வன்னியர் சமுதாயத்திற்கு தலைநிமிர்வை தந்தவர்கள் இரண்டு பேர். எஸ்.எஸ்.ராமசாமி, மாணிக்க வேல் நாயகர். இவர்களை என்றைக்காவது ராமதாஸ் மேடையில் சொல்லியிருக்கிறாரா? ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பே அவர்கள் கட்சி தொடங்கியவர்கள். உழவர் உழைப்பாளி கட்சியை எஸ்.எஸ்.ராமசாமி உருவாக்கினார். காமன் வீல் கட்சியை மாணிக்கவேல் நாயகர் உருவாக்கினார். சட்டமன்றத்தில் அதிக உறுப்பினர்களையும் பெற்றிருந்தனர். ஒரு கட்டத்தில் தனியாக நாம் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்யப்போகிறோம் என்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்கள். 

 

வன்னியர்கள் உள்ள வடஆற்காடு மாவட்டத்தில் மாணிக்கவேல் நாயகர் தலைமையில் காமன் வீல் கட்சியும், தென்னாற்காடு மாவட்டத்தில் எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியும் கட்சி நடத்தினார்கள். இவர்களால் வன்னியர்களுக்கு தலைநிமிர்வு ஏற்பட்டது. இவர்களால் ஒரே ஒரு நபர் கூட உயிரிழக்கவில்லை. வன்முறை வெறியாட்டத்தில் மக்களை வழிநடத்தவில்லை. தலித் சமூகத்திற்காக பாடுபட்ட இளையபெருமாள் காங்கிரஸ், வன்னியர்கள் தலைவர்களோடு நட்பாக இருந்தார்கள். எந்த வன்முறையும் நிகழவில்லை. ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். இவ்வாறு பேசினார்.  

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வேதனையாக இருக்கிறது' - ஏமாற்றத்துடன் வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'It's painful' - Suri who came to vote and returned disappointed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் வாக்களிக்க வந்த நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் அவர் வாக்களிக்காமலேயே திரும்பிச் சென்றார். வெளியே வந்த அவர் வாக்குச்சாவடி முன்பு நின்று பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''கடந்த எல்லா தேர்தலிலும் கரெக்டா என்னோட உரிமையை செலுத்தி கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த தடவை இந்த பூத்தில் என்னுடைய பெயர் விடுபட்டு போய்விட்டது என்கிறார்கள். என்னுடைய மனைவியின் ஓட்டு இருக்கிறது. ஆனால் என்னுடைய ஓட்டு இல்லை. என்னுடைய ஓட்டு விடுபட்டுப் போச்சு என்கிறார்கள். இருந்தாலும் 100% ஜனநாயக உரிமையை ஆற்றுவதற்காக வந்தேன். அது நடக்கவில்லை என்பது மன வேதனையாக இருக்கிறது. நினைக்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. இது எங்கு யாருடைய தவறு என்று தெரியவில்லை. இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டு ஓட்டு போட்டேன் என்று சொல்வதை விட ஓட்டு போடவில்லை என்ற வேதனையை நான் சொல்கிறேன். எல்லாருமே 100% ஓட்டு போட வேண்டும். அது நம்ம நாட்டுக்கு நல்லது. தவறாமல் எல்லாரும் வாக்கை செலுத்தி விடுங்கள். நான் அடுத்த எலெக்ஷனில் என்னுடைய வாக்கை செலுத்துவேன் என்று நம்புகிறேன்'' என்றார்.

Next Story

சென்னையில் வாக்குப்பதிவு மந்தம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. நாமக்கல் தொகுதியில் பகல் 3 மணி நிலவரப்படி 59.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாகையில் 54.07 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறையில் 50.91% வாக்குகள் பதிவாகியுள்ளது. திருச்சி மக்களவைத் தொகுதியில் 49.27% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சேலம் தொகுதியில் 60.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கரூரில் 59.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 53.02 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் 51.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 58.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இவை அனைத்தும் பிற்பகல் 3 மணி அளவில் வாக்குப்பதிவு நிலவரங்கள் ஆகும்.

சென்னையில் உள்ள மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மத்திய சென்னையில் 37.62% வாக்குகள் பதிவாகியுள்ளது. வடசென்னையில் 39.67 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. தென் சென்னையில் 40.98 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சராசரியாக  வாக்குப்பதிவு  50 சதவீதத்தை தாண்டிய நிலையில் சென்னையில் சராசரி வாக்குப்பதிவு 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.