Skip to main content

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்து விரோத கட்சியா? - திருமாவளவனின் பதில் இதுதான்

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்துவிரோதக் கட்சி என்று நிலவும் ஒரு குற்றச்சாட்டை அதன் தலைவர் தொல்.திருமவளவனிடம் தெரிவித்தோம். அதற்கான அவரது பதில்...

 

tt

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்து விரோத கட்சி என்று சொல்பவர்கள் எங்களை பாஜக விரோத கட்சி அல்லது ஆர்எஸ்எஸ் விரோத கட்சி என்று சொல்லியிருந்தால் அது பொருத்தம். என் சான்றிதழ் அடிப்படையில் நான் ஒரு இந்து. அது மட்டுமின்றி என்னைச் சுற்றியிருக்கும் உறவுக்காரர்கள் இந்துக்கள்தான். என் தாய், என் உடன் பிறந்தவர்கள் மற்றும் தொலைவில் இருக்கும் என் சொந்த பந்தங்கள் அனைவருமே இந்து கோட்பாடுகளை பின்பற்றி வாழ்பவர்களே. எனவே நாங்கள் இந்துக்களுக்கும் பாஜகவிற்கும் விரோதமானவர்கள் இல்லை. எந்த கோட்பாட்டை பாஜக உள்வாங்கி இருக்கிறது என்பதில்தான் இருக்கிறது. 

 

சனாதனம் எனும் கோட்பாட்டினுள் அப்பாவி இந்துக்கள்தான் சிக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவில்லை, அவர்களுக்கு எதிராக எந்தத் தாக்குதலையும் நாங்கள் நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம் அவ்வளவுதான். இது எல்லோருக்கும் தெரிந்த விவகாரம்தான். ஆனால், எல்லோரும் தொடக்கூடிய ஒரு விவகாரம் அல்ல. எல்லோரும் அறிந்த ஒரு செய்தி ஆனால், எல்லோரும் அதை பேசக்கூடிய அளவிற்கு இருக்கும் செய்தி அல்ல. என்னவென்றால் நாங்கள் சனாதனத்தின் மீது கை வைக்கின்றோம். இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. எங்களுக்கு முன்னால் பெரியார், அம்பேத்கர் மற்றும் 2500 வருடங்களுக்குமுன் கவுதம புத்தர் போன்றவர்கள் செய்தது. அதைத் தான் இன்று நாம் 'சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம்' என்ற ஒரு முழக்கமாக, மாநாடாக அறிவித்திருக்கிறோம். 

 

ஊழலால் இந்த நாடு சீரழிந்து வருகிறது, மதுவால் அடுத்த தலைமுறை எதிர்காலம் சிதைந்து வருகிறது. ஆகையால் ஒட்டுமொத்தமாக 'ஊழலாலும் மதுவாலும் இந்த நாடு சீர்கேடு அடைந்து வருகிறது எனவே ஊழலில் இருந்தும் மதுவிலிருந்தும் இந்த நாடை காப்பாற்றுவோம்' என்கின்ற அடிப்படையில் இந்த மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் அமைக்கவில்லை. இதுவெல்லாம் அவசியம்தான் என்றாலும்கூட சனாதன சக்திகளின் போக்குகள் மிகவும் ஆபத்தானவை. 'தாய் மதத்திற்கு திரும்புங்கள்' என்று சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறார்கள். பசுவை தெய்வம் என்கிறார்கள், உலகிலேயே மிக உயரமான ராமர் சிலையை நிறுவப் போகிறோம் என்று முழங்குகிறார்கள். உடன்கட்டை ஏறும் விஷயத்தையும் அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இப்படி சனாதனத்தின் போக்கு ஒவ்வொரு நாளும் விரிந்து பரவி கொண்டிருப்பதினால் ஊழலைவிடமும் மதுவைவிடவும் சனாதனம்தான் இந்த தேசத்தை சீரழிக்கக் கூடிய மிக மோசமான விஷயம். ஆகவே அந்தக் கருத்தியல் கொண்ட அமைப்புகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, அதிகாரத்துக்கு வரக்கூடாது. அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற அடிப்படையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய அளவில் தலைவர்களை ஒருங்கிணைக்கக் கூடிய நிகழ்வாக திருச்சி மாநாட்டை ஒருங்கிணைத்து வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.