Skip to main content

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்து விரோத கட்சியா? - திருமாவளவனின் பதில் இதுதான்

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்துவிரோதக் கட்சி என்று நிலவும் ஒரு குற்றச்சாட்டை அதன் தலைவர் தொல்.திருமவளவனிடம் தெரிவித்தோம். அதற்கான அவரது பதில்...

 

tt

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்து விரோத கட்சி என்று சொல்பவர்கள் எங்களை பாஜக விரோத கட்சி அல்லது ஆர்எஸ்எஸ் விரோத கட்சி என்று சொல்லியிருந்தால் அது பொருத்தம். என் சான்றிதழ் அடிப்படையில் நான் ஒரு இந்து. அது மட்டுமின்றி என்னைச் சுற்றியிருக்கும் உறவுக்காரர்கள் இந்துக்கள்தான். என் தாய், என் உடன் பிறந்தவர்கள் மற்றும் தொலைவில் இருக்கும் என் சொந்த பந்தங்கள் அனைவருமே இந்து கோட்பாடுகளை பின்பற்றி வாழ்பவர்களே. எனவே நாங்கள் இந்துக்களுக்கும் பாஜகவிற்கும் விரோதமானவர்கள் இல்லை. எந்த கோட்பாட்டை பாஜக உள்வாங்கி இருக்கிறது என்பதில்தான் இருக்கிறது. 

 

சனாதனம் எனும் கோட்பாட்டினுள் அப்பாவி இந்துக்கள்தான் சிக்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக பிரச்சாரத்தையும் மேற்கொள்ளவில்லை, அவர்களுக்கு எதிராக எந்தத் தாக்குதலையும் நாங்கள் நடத்தவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அவர்களுக்குத் துணையாக நாங்கள் இருக்கிறோம் அவ்வளவுதான். இது எல்லோருக்கும் தெரிந்த விவகாரம்தான். ஆனால், எல்லோரும் தொடக்கூடிய ஒரு விவகாரம் அல்ல. எல்லோரும் அறிந்த ஒரு செய்தி ஆனால், எல்லோரும் அதை பேசக்கூடிய அளவிற்கு இருக்கும் செய்தி அல்ல. என்னவென்றால் நாங்கள் சனாதனத்தின் மீது கை வைக்கின்றோம். இது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. எங்களுக்கு முன்னால் பெரியார், அம்பேத்கர் மற்றும் 2500 வருடங்களுக்குமுன் கவுதம புத்தர் போன்றவர்கள் செய்தது. அதைத் தான் இன்று நாம் 'சனாதன பயங்கரவாதத்தை எதிர்த்து தேசம் காப்போம்' என்ற ஒரு முழக்கமாக, மாநாடாக அறிவித்திருக்கிறோம். 

 

ஊழலால் இந்த நாடு சீரழிந்து வருகிறது, மதுவால் அடுத்த தலைமுறை எதிர்காலம் சிதைந்து வருகிறது. ஆகையால் ஒட்டுமொத்தமாக 'ஊழலாலும் மதுவாலும் இந்த நாடு சீர்கேடு அடைந்து வருகிறது எனவே ஊழலில் இருந்தும் மதுவிலிருந்தும் இந்த நாடை காப்பாற்றுவோம்' என்கின்ற அடிப்படையில் இந்த மாநாட்டை விடுதலைச் சிறுத்தைகள் அமைக்கவில்லை. இதுவெல்லாம் அவசியம்தான் என்றாலும்கூட சனாதன சக்திகளின் போக்குகள் மிகவும் ஆபத்தானவை. 'தாய் மதத்திற்கு திரும்புங்கள்' என்று சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறார்கள். பசுவை தெய்வம் என்கிறார்கள், உலகிலேயே மிக உயரமான ராமர் சிலையை நிறுவப் போகிறோம் என்று முழங்குகிறார்கள். உடன்கட்டை ஏறும் விஷயத்தையும் அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இப்படி சனாதனத்தின் போக்கு ஒவ்வொரு நாளும் விரிந்து பரவி கொண்டிருப்பதினால் ஊழலைவிடமும் மதுவைவிடவும் சனாதனம்தான் இந்த தேசத்தை சீரழிக்கக் கூடிய மிக மோசமான விஷயம். ஆகவே அந்தக் கருத்தியல் கொண்ட அமைப்புகள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது, அதிகாரத்துக்கு வரக்கூடாது. அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற அடிப்படையில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய அளவில் தலைவர்களை ஒருங்கிணைக்கக் கூடிய நிகழ்வாக திருச்சி மாநாட்டை ஒருங்கிணைத்து வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

11 மாதங்களுக்குப் பிறகு பிரச்சாரத்திற்குச் சென்ற அமித்ஷா; கொந்தளித்த மணிப்பூர் மக்கள்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Opposition to Amit Shah who went to Manipur to campaign after 11 months

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. மெய்தி - குக்கி சமூகத்தினருக்கு இடையே நடந்த இந்த மோதல் கொலை, தீவைப்பு, ஆயுதத் திருட்டுச் சம்பவங்ள் எனப் பூதாகரமாக மாறியது. அதுமட்டுமல்லாமல், வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயரிழந்தனர். 

இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை. இந்த வன்முறையை ஆளும் மத்திய, மாநில பாஜக அரசு கண்டுக்கொள்ளாத காரணத்தால், இதுவரை அங்கு அமைதியான சூழல் ஏற்படவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு கொடூர வன்முறை நடந்த பின்னரும் பிரதமர் மோடி இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை. மேலும், அங்குள்ள பாஜக அரசும் இதுவரை கலைக்கப்படவில்லை என எதர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்காக மணிப்பூர் சென்ற மத்திய பாஜக அமைச்சர அமித்ஷாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மணிப்பூரில், `இன்னர் மணிப்பூர்’, `அவுட்டர் மணிப்பூர்’ என இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளது. அங்கு, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு  நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கலவரம் நடைபெற்ற சமயத்தில் கூட செல்லாத மத்திய அமைச்சர் அமித்ஷா 11 மாதங்கள் கழித்து தேர்தல் பரப்புரைக்குச் சென்றார்.

அவருக்கு, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலை மார்க்கமாக சென்ற அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலைகளில் டயர்களுக்கு தீவைக்கப்பட்டது. பல இடங்களில் பாஜக வாகனங்களைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்த தவறிய பாஜக வாக்கு சேகரிக்க மட்டும் மணிப்பூர் செல்வாதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

இதனிடையே, மணிப்பூர் தலைநகரில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், அவர் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற முந்தைய நாட்களிலும் மணிப்பூரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லமால் ஆயுதம் ஏந்திய இருப்பிரிவினருக்குள் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் இப்படியான அசாதரண சூழல் உள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஓட்டிற்காக அமித்ஷா பிரச்சாரம் நடத்திச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றனர். இந்த முறை மணிப்பூரில் நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை இணைத்து `மணிப்பூர் ஜனநாயகக் கூட்டணி'யை உருவாக்கியிருக்கிறது பா.ஜ.க. இந்தியா கூட்டணிக்காக காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 10 கட்சிகள் இணைந்துள்ளது. இந்த முறை பாஜக அரசின் மேலிருக்கும் அதிருப்தியால் இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியே வெல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் சொல்லப்படுகிறது.

மணிப்பூரில் பிரச்சாரம் செய்ய வந்த அமித்ஷவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.