Skip to main content

லட்சம் கோடி சொத்து கொண்ட கோடீஸ்வரா் சாமி கோவிலில் எலும்பும் தோலுமாக காணப்படும் பசுக்கள்

Published on 18/07/2019 | Edited on 18/07/2019

 

         திருப்பதி வெங்கடாசலபதியின் சொத்துக்களையும் மிஞ்சி பல லட்சம் கோடி சொத்துக்களை கொண்டது தான் திருவனந்தபுரம் பத்மனாபசாமி கோவில். இந்த கோவிலின் தங்க வைர ஆபரணங்கள் கோவிலில் பூட்டப்பட்டு இருக்கும் நான்கு அறைகள் மற்றும் தெப்பகுளத்தின் பாதள அறைகளிலும் மலை போல் குவிந்துள்ளன. மேலும் இந்த கோவிலுக்கு நாடு முமுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனர். 

 

cow


         இந்த கோவிலுக்கு சொந்தமான 19 பசுக்கள் மற்றும் 17 கன்று குட்டிகள் கொண்ட கோசலையை டிரஸ்ட் ஓன்று பராமரித்து வருகிறது. இந்த பசுக்களின் இருந்து வரும் பாலைக் கொண்டு தான் பத்மனாபசாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இங்குள்ள பசுக்கள் இந்தியாவிலேயே மருத்துவ குணம் கொண்ட பாலை சுரக்கும் கிர் இன வகையை சார்ந்தது.


              இந்த நிலையில் அந்த கோசலையில் உள்ள பசுக்களுக்கு தீனி எதுவும் கொடுக்காமல் மேலும் மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் நோய் வாய்பட்டு கிடப்பதாகவும் பக்தா்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனை தொடா்ந்து கேரளா தேவசம் போர்டு மந்திரி கடகம்பள்ளி  சுரேந்திரன் மற்றும் தேவசம் போர்டு அதிகாரகள் நேரில் சென்று விசாரித்தனர். 


            அப்போது பசுக்கள் எல்லாம் எலும்பும் தோலுமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் பல பசுக்கள் நோய் வாய்பட்டு படுத்த படுக்கையாக கிடந்தன. அங்குள்ள பசுக்கள் தினமும் 15 லிட்டா் பால் கொடுத்து வந்த நிலையில் தற்போது 4 லிட்டா் பால் தான் கொடுக்கிறது. அதே போல் இந்த பசுக்களை பராமரிப்பதற்காக ஆன்லைன் மூலம் வசூல் வேட்டை நடத்தியதையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


          இந்த நிலையில் டிரஸ்ட் பராமரிப்பில் இருந்து கோசலையை மீட்டு கோவில் நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என்று பாஜக வினா் போர்க்கொடி தூக்கியுள்ளனா். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

“ராகுல், நேரு குடும்பத்தில் பிறந்தவர் தானா?” - கேரள எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kerala MLA sensational speech on Rahul was born in the Nehru family?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவு பெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் ஒருசேர இருந்தாலும், கேரளாவைப் பொறுத்தவரை இந்த இரு கட்சிகளும் தனித்தே போட்டியிடுகின்றன. அதே வேளையில், இந்த இரு கட்சி தலைவர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணியில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசும் போது, “பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள போது, மத்திய விசாரணை அமைப்புகள் அவரை ஏன் விட்டு வைத்திருக்கிறது?” என்று கூறி கேரள முதல்வர் பினராயி விஜயனை கடுமையாக சாடினார்.

இந்த நிலையில், பினராயி விஜயன் இருக்கும் இடதுசாரி ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்.எல்.ஏ. பி.வி அன்வர், ராகுல் காந்தியைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவர், “காந்தி பெயரை பயன்படுத்த ராகுலுக்கு உரிமை இல்லை. அவர் நான்காம் தர குடிமகன் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் நேரு குடும்பத்தில் பிறந்தவரா? எனக்கு சந்தேகம் உள்ளது. அவரது டி.என்.ஏ ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று பரபரப்பு கருத்தை கூறியுள்ளார்.