Skip to main content

கொங்கு மண்டலத்தில் பாலியல் குற்றங்கள் அதிகம் நடக்க காரணம் என்ன? - திருமுருகன் காந்தி ஆவேசம்

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

திருச்சியில் நடந்த திராவிட கழகத்தின் கூட்டத்தில் திக தலைவர் கீ.வீரமணியின் உரையில் கிருஷ்ணனை இழிவாக பேசினார் என்று இந்துத்துவ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கலகத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இருத்தரப்பிலும் கைது நடவடிக்கைகளும் நடந்தன. கீ.வீரமணி கிருஷ்ணனைப் பற்றி பேசியது தவறு என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில் மே பதினேழு இயக்கத்தின் தலைவர் திருமுகன் காந்தி கொடுத்த பேட்டியில்...  

 

thirumurukan gandhi speech about pollachi issue

 

“எந்த செய்தியையும் பொய்யாக பரப்புவது பாஜகவின் வேலை. ஒரு பொய்யான செய்தியைப் பரப்பி அதன்மூலம் பதட்டத்தை உருவாக்கி வன்முறையைக் கொண்டுவருவதே இந்துத்துவா அமைப்புகளின் வேலையாக இருந்துள்ளது. எனவே, அவர்கள் சொல்வது எதையும் தயவு செய்து நம்பாதீர்கள். 
 

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிடாதவர்கள் பாஜகவினர். கடைசியாக துடியலூரில் நடந்த சிறுமி கொலையில் ஈடுபட்டவர் ‘பாரத் இந்து சேனா’என்ற இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு பாலியல் குற்றங்களுக்குப் பின்னனியில் இருந்தவர்கள் பாஜகவைச் சார்ந்தவர்கள். அதைப்பற்றி நாம் கேள்வியெழுப்பக் கூடாது என்பதற்காக, அதை மடை மாற்றுவதற்காக, இதுமாதிரி பிரச்சாரம் நடைபெறுகிறது. ஏன் கோவையில், பொள்ளாச்சியில், சேலத்தில் இதுபோன்ற பாலியல் வன்முறைகள் அதிகமாக நடக்கிறது? கொங்கு மண்டலத்தில் இதுபோன்ற குற்றங்கள் அதிகம் நடக்க காரணம் என்ன? அங்கெல்லாம் இந்துத்துவா அமைப்புகள் வலிமையாக இருக்கின்றன. கடந்த காலத்தில் இந்துத்துவா நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதன் பின்னனியில் இதுபோன்ற பாலியல் குற்றங்கள்தானே இருந்திருக்கிறது? அதை மடை மாற்றுவதற்காகத்தான் கீ.வீரமணி பேசியதைக் கையில் எடுத்துக்கொண்டு பிரச்சனையாக மாற்றுகின்றனர். அதுதான் உண்மை.
 

இத்தனை ஆண்டுகாலமாக எங்கள் உரிமைகளுக்காக நாங்கள் பேசியதே இல்லை. அப்படி பேசினால் எங்களை வன்முறையாளராக சித்தரிக்கிறார்கள். நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால், பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட உங்களுடைய அமைப்பைச் சார்ந்தவர்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அவர்களைக் காவல்துறையை வைத்துப் பாதுகாக்கிறீர்கள். இதை கண்டுகொள்ளாமல் இருக்க 
அய்யா வீரமணி மீது கவனத்தைத் திருப்புவது, அவர் மீது தாக்குதல் நடத்துவதெல்லாம் அநியாயம். ஒரு கருத்தைக் கருத்தால் மட்டுமே எதிர்கொள்ள வேண்டும். அவர் பேசியதிற்கு பதில் விமர்சனம் வையுங்கள் அதை எதிர்கொள்கிறோம். அதை விட்டுவிட்டு ஏன் வன்முறையை கையாளுகிறீர்கள்? ஏன் பொய் பிரச்சாரம் செய்கிறீர்கள்? திராவிட கழகத்தினர் ஜனநாயக முறைப்படி அந்த பிரச்சனையை அணுகினர். அவர்களை கைது செய்து சிறையில் வைத்துள்ளனர். திராவிட கழக திருச்சி மாவட்ட பொறுப்பாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என்று தன் கண்டனத்தை தெரிவித்தார்.  

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

இட ஒதுக்கீட்டைப் பறித்த மோடியைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தாதது ஏன்? - திருமுருகன் காந்தி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Thirumurugan Gandhi question Why didn't  pmk   struggle against Modi for taking away reservation

சிதம்பரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டனியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, சிதம்பரம் நகரம் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிற தேர்தல் இதுவரை நடக்காத வித்தியாசமான தேர்தல்.  இது யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்கான தேர்தல்.  மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கானது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல். கடந்த 10 வருடத்திற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது. தற்போது எரிவாயு, பெட்ரோல், டீசல் பன்மடங்கு உயர்ந்து மக்கள் மீளமுடியாத விலைவாசி உயர்வால் தினந்தோறும் அவதி அடைகின்றனர். இதில் ஜிஎஸ்டி வரியைப் போட்டு மக்களை நசுக்கி வருகிறது.  

தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைகளைத் தட்டிப் பறித்து மேல் சாதிக்காரனுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இட ஒதுக்கீட்டையும், வேலையையும் பறித்த மோடியைக் கண்டித்து பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது என்ன ஞாயம்? இவர்களுக்கு கல்வி உரிமையும், வேலை, இடஒதுக்கீடு உரிமையை மறுத்தபோது போராடியவர் திருமா தான். நெய்வேலி என்எல்சி யில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜசபாவில் அன்புமணி பேசினாரா?  கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் போதாது.  

மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடியும் தமிழகத்தில் என்ன செய்தார் என்பதை கூற முடியாது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யோக்கியர் போல் பேசுகிறீர்களே நீங்கள் மோடிக்கு அடிமையாக இருந்தது தெரியாதா? அமலாக்கத்துறை அனைவர் வீட்டுக்கும் செல்கிறது ஆனால் எடப்பாடி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? இதில் இருந்தே தெரியவில்லையா மோடிக்கும் எடப்பாடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் அதிமுக என்ற அடிமைக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.

இங்கே நிற்கக்கூடிய வேட்பாளர்கள் திருமாவுக்கும் எதிராக இணையான வேட்பாளர்களா? இவரது கல்வி தகுதிக்கும், பேச்சுக்கும், பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர்கள் கொடுப்பார்களா? அவர்கள் அடிமையாக தான் இருப்பார்கள். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய அளவில் கவனிக்கக் கூடிய தலைவராக திருமா திகழ்கிறார். அவர் இந்த தொகுதி பிரதிநிதி மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதிநிதி ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தான் நமக்கு பெருமை.  ஏப்ப சாப்பைகளை அனுப்பி என்ன பயன் எனவே சிந்தித்து திருமாவை தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறவைப்பது நமது கடமை” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடப்பார்வையாளர் பாவரசு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச்செயலாளர் பால.அறவாழி, திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.