Advertisment

''மிகப்பெரும் எழுச்சியோடு கமல்ஹாசனை வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்'' - பிரச்சாரத்தில் சினேகன்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் திமுக மற்றும் அதிமுக கூட்டணியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம்சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த சினேகன் பேசுகையில், ''இடைத்தேர்தலையொட்டி நாளை மாலை கமல்ஹாசன் இந்திய காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ஈரோடு வருகிறார்.

Advertisment

அதற்கான ஆயத்தப் பணிகளை மக்கள் நீதி மய்யத்தைச்சேர்ந்த பொறுப்பாளர்கள் கடந்த ஒரு வார காலமாகசெய்து வருகின்றனர். மிகப்பெரும் எழுச்சியோடு கமல்ஹாசனை வரவேற்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இது இமாலய வெற்றியாக இருக்க வேண்டும். அதற்கு பலமூட்டும் வகையில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் தொண்டர்களும்தலைவரும் முற்போக்கோடு உழைத்துக் கொண்டிருக்கிறோம். அவருடைய வெற்றி மிகப்பெரிய உயரமான வெற்றியாக இருக்கும் என நம்புகிறோம்'' என்றார்.

Advertisment

kamalhaasan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe