Skip to main content

இது எல்லாமே ஸ்டாலின் ராஜதந்திரமா? 

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.மேலும் வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு யார் ஆட்சி தமிழகத்தில் இருக்கும் என்று பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து அரசியலில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் வாக்காளர்கள் மத்தியிலும்,அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

dmk



இந்த தேர்தலில் அதிமுகவை கடுமையாக விமர்சித்த பாமக அதிமுகவிடம் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. முதலில் பாமக திமுகவிடம் தான் கூட்டணி குறித்து பேசியதாகவும் அதை திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் அதனால் அவர்களை கூட்டணியில் சேர்க்கவிட்டால் அதிமுகவிடம் கூட்டணிக்கு செல்வார்கள் அதனால் அந்த கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் மற்றும் மக்கள் அதிருப்தியில் திமுகவிற்கு பலம் சேரும் என்பதாலேயே ஸ்டாலின் இந்த ராஜதந்திர முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் கடந்த சில நாட்களாக திமுக பாஜகவிடம் பேசியது,மூன்றாவது அணி அமைக்க விரும்பும் சந்திரசேகரராவிடம் பேசியது என்று பெரும் விவாதத்தை அரசியல் கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

 

dmk



இந்த மூவ் எல்லாமே ஸ்டாலின் தனது அரசியல்  இமேஜை இந்திய அளவில் உயர்த்துவர்க்காக எடுக்கப்பட்டது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி இருக்கும் நிலையில் ஸ்டாலின், திமுக,காங்கிரஸ் கூட்டணியில் ராகுல்காந்தி தான் அடுத்து இந்தியாவின் பிரதமர் என்றும் அறிவித்தார்.மேலும் மற்ற மாநிலத்தில் பாஜக அல்லாத கூட்டணியில் இருப்பவர்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

 

dmk



இந்த நிலையில் திமுக தலைவர் ஏற்கனவே ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறியதால், தேர்தல் முடிவுக்கு பின் மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பன்மை இல்லாமல் ஆட்சியை அமைக்க மாநில கட்சியின் ஆதரவு தேவை என்ற நிலைப்பாடு வந்தால் மாநில கட்சிகள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி செய்யும் அப்போது திமுகவின் நிலைப்பாடு என்ன என்று அறியவே இப்படியான அரசியல் மூவ்கள் நடப்பதாகவும் அதை ஸ்டாலின் சிறப்பாக கையாளுகிறார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.