Skip to main content

“இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை” - அமலாக்கத்துறையினர் வாதம்

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

"There is no place in the law to grant interim bail" - Argument of enforcement officers

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரி சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள் குவிந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனையில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

இந்த கைது நடவடிக்கை குறித்து பல்வேறு அமைச்சர்களும் மாற்று அரசியல் கட்சியினரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை முதல் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவரது இதய ரத்தக் குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை காவேரி மருத்துவமனையில் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் காவேரி மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக உயர்நீதிமன்றத்தில் கொடுத்த முறையீடு குறித்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

 

செந்தில் பாலாஜியை காவலில் வைக்குமாறு அமலாக்கத்துறை கூறும்போது அதற்கு எதிராக வாதாட திமுக வழக்கறிஞர்களும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதி செய்து காவல் வைப்பது தொடர்பாக முடிவெடுக்க நீதிபதியே மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

 

வரும் 28 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் என சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மருத்துவமனையில் விசாரணை நடத்திய நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். திமுக வழக்கறிஞர்கள், அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ச்சியாக மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருக்க அனுமதி வேண்டும் எனவும் அவருக்கு உடனடியாக பெயில் கொடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இருதரப்பு வாதங்களையும் கேட்பதற்காக இருதரப்பு வழக்கறிஞர்களையும் நீதிபதி நீதிமன்றத்திற்கு வரச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

 

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கையை நிராகரிக்கக் கோரியும், அவரை உடனடியாக ஜாமினில் விடுவிக்கக் கோரியும், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்குமாறும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3 மனுக்கள் மீதும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 

 

விசாரணையில் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ திமுக தரப்பில் நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார். செந்தில் பாலாஜியை கைது செய்ததை நிராகரிக்கக் கோரி திமுக சார்பில் வாதம் வைக்கப்பட்டது. செந்தில் பாலாஜியை கைது செய்ததில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் 2021 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் தற்போது செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. செந்தில் பாலாஜியை சந்திக்க குடும்ப உறுப்பினர்கள், வழக்கறிஞர்களைக் கூட அனுமதிக்கவில்லை என்றும், திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளதாகவும் திமுக தரப்பினர் வாதிட்டனர். 2013 ஆம் ஆண்டு வழக்கில் தொடர்புடைய துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது தலைமைச் செயலகத்தில் வேறு அறையிலிருந்ததாகவும் தற்போது அமலாக்கத்துறை வேறு அறையில் சோதனை நடத்தி இருப்பதாகவும் திமுக தரப்பினர் வாதிட்டனர். 

 

குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி கைது செய்யப்படுவதற்கு முன் உரிய நோட்டீஸ் வழங்கி இருக்க வேண்டும் என்றும் அவர் மீது புகார் கூறப்பட்டு 7 ஆண்டுகள் கழித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திமுக தரப்பு கூறியது. செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் தான் தண்டனை. அதற்காக அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும், செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் இளங்கோ தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.

 

தொடர்ந்து அமலாக்கத்துறை வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தார். செந்தில் பாலாஜி ஜாமின் மனு விசாரணையில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் ஏ.ஆர்.எஸ்.சுந்தரேசன் வாதிட்டார். விசாரணைக்கு செந்தில் பாலாஜி எந்த ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்றும் கைதுக்கு முன் தொலைபேசி மூலம் அவரையும் அவரது மனைவியையும் தொடர்பு கொண்டோம். ஆனால் இருவரும் தொலைபேசியையும் எடுக்கவில்லை. இமெயில் அனுப்பியும் பதில் இல்லை என்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நாங்கள் அனுப்பிய சம்மனையும் கைது மெமோவையும் செந்தில்பாலாஜி பெற மறுத்தார் என்றும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கைது செய்யப்படுவோம் எனத் தெரிந்தே மெமோவை செந்தில் பாலாஜி பெற மறுத்துவிட்டார். ரிமாண்ட் ஏற்கப்பட்டால் தான் ஜாமீன் கோரமுடியும். ரிமாண்டை நிராகரிக்குமாறு கோர முடியாது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்றும் இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடமில்லை என்றும் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். மேலும் நேற்றுவரை ஆரோக்கியமாக இருந்தவர் தற்போது உடல்நலக்குறைவு என்கிறார்” என அமலாக்கத்துறையினர் வாதிட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்