Skip to main content

'எங்களுக்குள் பிரச்சனைகள் இருக்கலாம்; ஆனால் ஆட்சியில் எந்தக் குற்றமும் கண்டுபிடிக்க முடியாது' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

Published on 26/07/2023 | Edited on 26/07/2023

 

'There may be problems within us but no crime can be found in the government' - CM Stalin's speech

 

திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக பயிற்சிப் பாசறை நடைபெற்றது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு நடைபெற்ற இந்தப் பயிற்சிப் பாசறையில் 12,645 பேர் கலந்து கொண்டுள்ளனர். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்வின் மேடையில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''திமு கழகத்தின் தீரர்கள் கோட்டம் தான் திருச்சி. 1971 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில்தான் கலைஞர் நம்முடைய கொள்கை முழக்கங்கள் ஆன 'அண்ணா வழியில் அயராது உழைப்போம்; ஆதிக்கமற்ற  சமுதாயம் அமைத்தே தீருவோம்; வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்; இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்; மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி' என்ற ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு உருவாக்கித் தந்தார்.

 

முக்கியமான மாநாடுகளைக் கலைஞர் திருச்சியில் தேர்ந்தெடுத்து நடத்துவார். அப்படி நடத்தக்கூடிய மாநாடுகள் எல்லாம் திருப்புமுனை மாநாடுகளாக அமையும். கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திருச்சியில் மாநாடுபோல் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம் தான் தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமிடும் அளவிற்குச் சிறப்பான பொதுக்கூட்டமாக இங்கு அமைந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவின் கவனத்தை ஈர்த்த அந்த மாநாட்டை முன் நின்று நடத்திக் காட்டியவர் தான் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு.

 

அவரைப் பாராட்டுவது என்பது என்னை நானே பாராட்டிக் கொள்வது என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. 'நேரு என்றால் மாநாடு; மாநாடு என்றால் நேரு' என்று பெயர் பெற்றவர்தான் நேரு என்பதையும் நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அத்தகைய பாராட்டுக்கு முழுத் தகுதி படைத்தவர் முதன்மைச் செயலாளர் நேரு. மிகக் குறுகிய காலத்தில் பத்து நாட்களுக்குள்ளாக வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தை நடத்திட வேண்டும் என்று நாங்கள் எடுத்துச் சொன்ன நேரத்தில் அதை ஏற்றுக்கொண்டு மிகச் சிறப்பாகப் பிரம்மாண்டமாக அவர் நடத்திக் காட்டி இருக்கிறார். அதற்காக அவருக்கு மட்டுமல்ல அவருடன் இணைந்து பணியாற்றிய திருச்சி ஒன்றுபட்ட மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.

 

பயிற்சிப் பொறுப்பாளர்களே உங்களிடம் வழங்கப்பட்டுள்ள 'திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள்' என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தாலே அரசின் திட்டங்களைப் பற்றி உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விடும். யாருக்கு என்ன தேவை அதைக் கண்டறிந்து பெற்றுக் கொடுங்கள்'. ஒருவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்குவதில் உதவி தேவைப்படலாம். இன்னொருவருக்குப் பட்டா மாறுதல் உதவி தேவைப்படலாம். இப்படி ஒவ்வொருவரின் தேவையைக் கண்டறிந்து அந்தப் பணிகளை நிறைவேற்றித் தாருங்கள். இதனைச் செய்து தர உங்கள் பகுதியினுடைய ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர், கிளைச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சரை நாடுங்கள். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரக்கூடிய கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பலமுறை சொல்லியுள்ளேன். மீண்டும் சொல்கிறேன். வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் எடுத்து வரக்கூடிய கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். வாக்காளர்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு கொள்ள வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவராக மாற வேண்டும். எந்தக் கொம்பனும் நமது ஆட்சியைக் குற்றம் சொல்ல முடியாது. எங்களுக்குள் பிரச்சனைகள் இருக்கலாம்.ஆனால் ஆட்சியில் எந்த குற்றமும் கண்டுபிடிக்க முடியாது'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.