Skip to main content

“கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது; தயாராக இருங்கள்” - உதயநிதி ஸ்டாலின்

Published on 07/03/2023 | Edited on 07/03/2023

 

“There is hope that the request will be met; Be prepared” Udayanidhi Stalin

 

தமிழகத்தின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டும் திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், இது தன்னுடைய கனவுத் திட்டம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில் இத்திட்டத்தின் ஒரு பகுதியாக போட்டித் தேர்வுப் பிரிவு என்னும் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இப்பிரிவில் தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் போட்டித் தேர்வை எளிதாக அணுகும் வண்ணம் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட போட்டித் தேர்வுப் பிரிவினை அமைச்சர் உதயநிதி இன்று துவக்கி வைத்தார். 

 

சென்னை நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி, “பள்ளிக் கல்வி இடை நிற்றலை அறவே ஒழித்திட 1 முதல் 5 வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தினை முதலமைச்சர் அறிவித்துள்ளார். நான் எந்த மாவட்டத்திற்கு ஆய்விற்கு சென்றாலும் அந்தந்த பகுதியிலுள்ள பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை ஆய்வு செய்து வருகிறேன். அங்கு உணவு தரமாக குறித்த நேரத்தில் வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கேட்டறிந்து எனது காலை சிற்றுண்டியினை அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு வருகிறேன். புதுமைப் பெண் திட்டமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் இதுவரையில் தமிழ்நாட்டில் உள்ள மகளிர் 250 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இதுவே இது எவ்வளவு முக்கியமான திட்டம் என்பதற்கு எடுத்துக்காட்டு.

 

பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நவீன பாடப்பிரிவுகளில் பயிற்சி வழங்கி அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். ஆண்டு தோறும் 10 லட்சம் இளைஞர்கள் வேலை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டம் துவக்கப்பட்டபோது, இந்த திட்டம் துவக்கப்பட்ட இந்த நாள் ஒரு பொன் நாள் என முதலமைச்சர் சொன்னார். இன்று நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியை துவக்கி வைக்கும் நானும் இன்று அதையேதான் உணருகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, இரயில்வே போன்ற துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. ஆனால், இதில் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் மிகவும் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்பை பெற்றுள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்; மாற்றப்பட வேண்டும். அண்மையில் பிரதமரை சந்தித்தபோது தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுப்பணிகளில் தமிழ்நாடு மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வலியுறுத்தியுள்ளேன். அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு நீங்கள் உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள். 

 

சென்னை போன்ற நகரங்களில் மட்டுமே அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் உள்ளன. இதற்கு லட்சக்கணக்கில் செலவிட வேண்டிய நிலை உள்ளது. கிராமப்புற மாணவர்களால் கூடுதல் கட்டணம் செலுத்தி இத்தகைய பயிற்சிகளை பெற முடியாது. இதனால் அவர்களது வேலை வாய்ப்பும் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்றி நம் மாணவர்கள் கட்டணமின்றி பயிற்சிகளை பெற்று மத்திய அரசு பணியில் சேரவும் மத்திய அரசு கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பினை பெறவும் நான் முதல்வன் போட்டித் தேர்வு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு அண்ணனாக உங்கள் முன்னேற்றத்திற்கு என்றும் துணை நிற்பேன் என்ற உறுதியை அளிக்கிறேன்.” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.