Skip to main content

“தங்கமணியும் வேலுமணியும் என்னிடம் ஓடி வந்தார்கள்...” - கூட்டத்தில் ஓபிஎஸ் சொன்ன ரகசியம்

Published on 21/12/2022 | Edited on 21/12/2022

 

"Thangamani and Velumani came running to me..." was the secret told by OPS in the meeting

 

அதிமுக ஓபிஎஸ் ஈபிஎஸ் என இரு தரப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இரண்டு தரப்பும் அதிமுக தங்கள் கட்சி என உரிமை கொண்டாடி வருகிறார்கள். இதில் ஈபிஎஸ், தனது தரப்பு ஆதரவாளர்களுடன் கட்சி பொதுக் கூட்டங்கள் கூட்டுவது, அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் எனத் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு அமைதியாகவே இருந்தது.

 

இந்நிலையில், இன்று (டிச.21) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று கடந்த சனிக்கிழமை ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதற்கான முன்னேற்பாடாக நேற்று ஓபிஎஸ் அதிமுக கட்சியின் மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

 

இதன் பின் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “நிரந்தர பொதுச்செயலாளர் என ஜெயலலிதாவை நியமித்தோம். ஆனால் அதை ரத்து செய்தவர்களை இந்த நாடு ஒருபோதும் மன்னிக்காது. கழகத்தின் உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்களை நிர்ணயம் செய்யும் பொறுப்பு தொண்டருக்குத்தான் இருக்கும். இதை எப்போதும் மாற்ற விடமாட்டோம். ஒற்றுமையாக இருங்கள் என நாம் சொல்லுகிறோம். ஒற்றுமையாக இருக்க வேண்டாம் என ஒருவர் சொல்லுகிறார். ஒற்றுமைக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லையாம். உங்களுக்கு தைரியமிருந்தால் தனிக் கட்சி வச்சு நடத்திப் பாருங்கள். 

 

பழனிசாமி எம்ஜிஆரை நேரில் சந்தித்துப் பேசியது உண்டா? நான் பொறுப்பேற்ற அடுத்த வருடம் ஜெயலலிதா என்னிடம் 2 கோடி தேவைப்படுகிறது எனக் கேட்டார். கழக நிதியில் இருந்து எடுத்துக்கொள்கிறேன் எனச் சொன்னார். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் எனக் கூறி செக்கில் உடனடியாகக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டேன். இரண்டு மாதங்களில் அந்தப் பணத்தை மீண்டும் கொடுத்துவிட்டார். இப்படிப்பட்ட தலைவர் நம் தலைவர். அவரின் வழிகாட்டுதலில், 0 வாக இருந்த பணம் இன்று 256 கோடி ரூபாய்க்கு இன்று டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதிலிருந்து வரும் வட்டியை வைத்து இன்று கட்சியை நடத்திக்கொண்டுள்ளோம். இந்தப் பணம் அனைத்தும் தொண்டர்கள் கொடுத்த பணம்.

 

சட்டமன்றத்தில் டிடிவி, எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தார். 36 எம்.எல்.ஏக்கள் டிடிவி உடன் சென்றார்கள். தங்கமணி, வேலுமணி என்னிடம் ஓடி வந்தார்கள். ஆட்சி கவிழ்ந்துவிடும் எனச் சொன்னார்கள். திடீரென டிடிவி உடன் சென்ற எம்.எல்.ஏக்களில் 36 பேர் 16 ஆகக் குறைந்துவிட்டனர். தகுதி நீக்க எம்.எல்.ஏக்களில் 9 பேர் தான் வெற்றி பெற முடிந்தது. இதனால் ஆட்சிக் கவிழும் அபாயம் இருந்தது. நான் அவர்களோடு சேர்ந்து ஆட்சியைக் கவிழ்த்தால் அந்த நேரத்தில் சிறு மகிழ்ச்சி கிடைக்கும் ஆனால் ஆட்சியை கவிழ்த்த கெட்ட பெயர் உருவாகிவிடும். எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அவர்களுடன் சேர்ந்தேன்.

 

ஜெயலலிதாவிடம் வேலை பார்க்கும்போது தீ மாதிரி வேலை செய்ய வேண்டும். 100 சதவீதம் அவர் சொன்ன வேலைகளை முடிக்கவேண்டும். அதில் கொஞ்சம் குறைந்தாலும் வீட்டிற்கு அனுப்பிவிடுவார். 18 வருடங்கள் அவருடன் இருந்து வேலை பார்த்துள்ளேன். அதில் அவர் எனக்கு கொடுத்த பதவியில் தகுதி நீக்கம் செய்ததே இல்லை” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.