Skip to main content

தினகரனின் அமமுக வேலூரில் போட்டியிட்டால்... தங்க தமிழ்ச்செல்வன் 

Published on 27/07/2019 | Edited on 27/07/2019

 

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏவும், திமுகவில் அண்மையில் இணைந்தவருமான தங்க தமிழ்ச்செல்வன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 

அதில் அவர், நான் இருக்கும்போது, மாவட்டச் செயலாளராக இருக்கும்போது பக்கத்து மாவட்ட செயலாளரை அனுப்பி வேவு பார்த்தால் கோபம் வரத்தானே செய்யும். இதனை கேட்டால் உளறுகிறார் என்கிறார்கள். நான் உளறவில்லை. ஆரம்பத்தில் இருந்து தினகரன்தான் உளறுகிறார். 18 எம்எல்ஏக்களை 18 படி என்று சொன்னார். இப்ப 18 பேரை கண்டுகொள்ளவில்லை. 18 பேருக்கும் பதவிதான் போனது. அந்த 18 பேரின் குடும்பம் எவ்வளவு வேதனை படும். அவர்களை காப்பாற்றினீர்களா?

 

ttv dinakaran - thanga tamilselvan



அதிமுகவை மீட்போம், இரட்டை இலையை மீட்போம் என்றார். மீட்டுவிட்டாரா? 18 சட்டமன்றத் தொகுதியில் ஒருவரையாவது ஜெயிக்க வைக்க முடிந்ததா? எம்.பி. தேர்தல் நமக்கு தேவையில்லை. அவ்வளவு பெரிய கட்சி இல்லை அமமுக என்று சொன்னேன். ஆரம்பத்தில் இருந்து சொன்னேன். 18 பேருக்கு பதவி போய்விட்டது. 18 பேரும் எம்எல்ஏ ஆவதுதான் முக்கியம் என்று எவ்வளவோ சொன்னேன். தோற்றவர்கள் நாங்கள். மீண்டும் வெற்றி பெற்றால்தான் மக்கள் நம்புவார்கள் என்று சொன்னேன். எவ்வளவு சொல்லியும் தினகரன் கேட்கவில்லை. 
 

யார் சொல்வதையும் கேட்காமல் தன்னிச்சையாக அவர் எடுத்த முடிவு காரணமாகத்தான் இந்த கட்சி அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. இந்த தேர்தலில் அமமுகவை அதிமுகவினர் நம்பவில்லை என்பதை காட்டிவிட்டது. எல்லோரையும் ஏமாற்றிவிட்டனர். 18 எம்எல்ஏக்களை ஏமாற்றியுள்ளனர். சிலீப்பர் செல் இருக்கிறது என்று ஏமாற்றியுள்ளனர். அதிமுக தொண்டர்கள் எல்லோரும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். 


 

சசிகலா வெளியே வந்தால் ஏதாவது மாற்றம் நிகழுமா என்ற கேள்விக்கு, யார் வந்தாலும் வராவிட்டாலும் தினகரன் இந்த கட்சியைவிட்டு வெளியே போகமாட்டார். இவரது டார்கெட் இன்னும் 30 வருஷம். 30 வருஷம் கழித்து இவர் சி.எம்.ஆக வருணும் தமிழ்நாட்டுக்கு. அப்ப ஒரு ஆள் கூட இவர்கூட வரமாட்டாங்க. கட்சி இருக்கும். தொண்டர்கள் வேண்டுமே. நிர்வாகிகள் வேண்டுமே. 

 

தேர்தல் தோல்விக்குப் பிறகு செய்தி தவறை அவர் உணர்ந்ததாக தெரியவில்லை. இன்னும் பெரிய தலைவனாக தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறார். அது நிச்சயமாக இல்லை. அதிமுகவுக்கு ஒரு மாற்றாக நூறு சதவீதம் தினகரன் இல்லை. அவரது கட்சிக்கு எதிர்காலம் இருக்கிறது என்றால் வேலூர் பாராளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை. போட்டியிட்டால் ஆயிரம் ஓட்டுக்கள்தான் கிடைக்கும். இன்னும் மோசமான நிலைக்குத்தான் அந்த கட்சி போகும். கேட்டால் கட்சியை பதிவு செய்யவில்லை. பதிவு செய்ய பின்னர் நிற்கலாம் என்கிறார்கள். 22 தொகுதி இடைத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் கட்சியை பதிவு செய்யாமல்தானே தேர்தலை சந்தித்தீர்கள். இவ்வாறு கூறினார். 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.