Skip to main content

ஒரணியில் திரள வேண்டிய... தமிமுன் அன்சாரி 

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

 

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 


இன்று இந்தியாவின் 17 வது நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகி பல்வேறு புதிய விவாதங்களை உருவாக்கியிருக்கிறது.
 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஒரு வகையான மனநிலையும், வட இந்தியாவில் ஒரு வகையான மனநிலையும் நிலவுவதை இத்தேர்தல்  முடிவுகள் வெளிக்காட்டுகிறது.

 

thamimun ansari



 

இந்தி பேசும் மாநிலங்களில், அப்பகுதி மக்கள் அளித்திருக்கும் வாக்குகள் முழு இந்தியாவையும் உள்ளடக்கிய வெற்றியை பாஜக கூட்டணிக்கு கொடுத்திருக்கிறது.
 

காங்கிரஸ் கட்சி முற்போக்கான தேர்தல் அறிக்கையை தந்து, நல்லிணக்கமான அரசியலை முன்னெடுத்து பரப்புரை செய்த நிலையிலும், அக்கட்சி பின்னடைவை சந்தித்திருப்பது ஆச்சர்யமளிக்கிறது.
 

அது போல தேசிய அளவில் இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு கவலையளிக்கிறது.
 

இனி வரும் காலங்களில் இந்தியாவின் பன்மை கலாச்சாரம், சமூக நீதி கொள்கைகள், சுதந்திர அரசியல், மாநில உரிமைகள் ஆகியவற்றுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் என்ற அச்சம் உருவாகியிருக்கிறது.
 

 இத்தேர்தல் முடிவுகள் மூலம் நாடு தழுவிய அளவில் காங்கிரஸ், இடதுசாரிகள், பன்மை கலாச்சாரம் மற்றும் சமூக நீதியை முன்னிறுத்தும் மாநில கட்சிகள் ஆகியவை ஒரணியில் திரள வேண்டிய காலச் சூழல் உருவாகும் என்பதை மறுப்பதற்கில்லை. 
 

பல மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது விமர்சனங்கள் இருந்தாலும்,இத்தேர்தல் முடிவுகளை அனைவரும் அமைதியாக ஏற்க வேண்டும் என்பதே ஜனநாயக பண்பாகும்.


 

இந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
 

வெற்றிப் பெற்றவர்கள் நிதானத்துடன் அனைவரையும் மதித்து பணியாற்ற வேண்டும் என்றும், வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நம்பிக்கையோடு புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

”ஒன்றிய அரசால் நலிவடைந்த ஜவுளித்துறையை மீட்டெடுக்கப்படும்” - திமுக வேட்பாளர் உறுதி

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
DMK candidate KE Prakash assured that weakened textile sector will be revived

ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டெடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷ் உறுதியளித்துள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம், தில்லைநகர், அக்ரஹாரம், பெரியார்நகர், ஆண்டிக்காடு, சுபாஸ்நகர், பழனியப்பாநகர், ஒட்டமெத்தை, உடையார்பேட்டை, நாராயணன்நகர், கொத்துக்காரன்காடு, வெடியரசன்பாளையம், ஆலாம்பாளையம், சின்னகவுண்டன்பாளையம், வெங்கடேசபுரம், எஸ்.பி.பி. காலனி, அன்னை சத்யா நகர், ஆயக்காட்டூர், கரட்டாங்காடு, வஉசி நகர், முனியப்பன்நகர், கொங்கு நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில்  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் பிரகாஷ் பேசியதாவது, சமையல் கேஸ் விலையானது தற்போது இருப்பதை விட பாதியாக குறைக்கப்படும். மாணவர்கள் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும். 10 ஆண்டுகால பாஜக ஆட்சி காலத்தில் ஜவுளித்துறை மிகவும் நலிவடைந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஏராளமான ஜவுளி உற்பத்தியாளர்கள் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த ஜவுளித்தொழிலை விட்டு வெளியேறி மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். ஒன்றிய அரசின் தவறான கொள்கைகள், திட்டங்கள்தான் இதற்கு முக்கிய காரணம்.

எனவே மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் உடனடியாக நலிவடைந்து வரும் ஜவுளித்துறையை மீட்டு மேம்படுத்தவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ரயான், பாலியஸ்டர் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு ஜிஎஸ்டி ரிட்டன் மட்டும் ரூ.160 கோடி ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது. இதை முழுமையாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விசைத்தறிகள் நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல விவசாய நிலங்களைப் பாதிக்கும் உயர்மின் கோபுரங்கள், கெயில் மற்றும் பெட்ரோல் பைப் லைன் போன்ற திட்டங்களை விவசாய நிலங்களுக்கு பதிலாக சாலையோரங்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு இத்திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தரப்படும்.

ஏழைக்குடும்பங்களின் வறுமையைப் போக்கிட ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். நீட் விலக்கு, கல்விக்கடன் ரத்து, விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்பதோடு விவசாய தொழிலாளர்களின் 100 நாள் திட்டமானது 150 நாள்களாகவும், ஊதியம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்படும். இவ்வாறு கே.இ.பிரகாஷ் பேசினார்.

வாக்குசேகரிப்பின் போது மாநில சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

“இந்தியாவில் மதிக்கப்படும் தலைவராக உயர்ந்திருக்கிறார் திருமாவளவன்”- வைகோ

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Thirumavalavan has risen to become a respected leader in India says Vaiko

அரியலூர் பேருந்து நிலையம் அருகே விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயம்கொண்டான் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய வைகோ, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய தேர்தல். இந்தியா தமிழ்நாடு எந்த திசையில் செல்லும் என்பதை முடிவு செய்யும் தேர்தல். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையேயான போர் இந்த தேர்தல். பேசுகின்ற இடங்களில் லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திழுக்க கூடிய எனது சகோதரருக்கு வாக்கு சேகரிக்க விரும்பி வந்துள்ளேன். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு வட நாட்டுப்பெயர்களை சூட்டுகின்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய மாவீரர் தான் திருமாவளவன்.

திராவிட இயக்கத்தை அழிப்பேன் என்று பிரதமர் தனது பதவியின் மதிப்பறியாது பேசுகிறார். பிரதமரே இது திராவிட இயக்க பூமி, அதன் தலைவர்களாலும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் பாடுபட்ட வளர்த்த இயக்கம் தான். மோடி தலைமையில் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி போகிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் நாடாளுமன்ற‌ முறையை மாற்றிவிட்டு ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்து, ஜனாதிபதி ஆகலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கிறார். திராவிட இயக்கம் உள்ளவரை அது நடக்காது. நான் திமுக-வில் இருந்து வெளியேறி இருந்தாலும் மீண்டும் குடும்பத்தில் இணைத்துள்ளேன். இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் மு‌க‌‌ ஸ்டாலின் விளங்குகிறார்.

டெல்லி மும்பை கூட்டங்களில் அனைத்து தலைவர்களும் ஸ்டாலினுடன் வந்து புகைப்படம் எடுக்குமளவுக்கு புகழ்பெற்றுள்ளார். குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் திராவிட மாடலின் முதல்வர். இத்திட்டத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதைத் தாண்டி‌ கனடா போன்ற  பல நாடுகளும் பின்பற்றுகின்றனர். உலகிற்கு வழிகாட்டும் தகுதியை ஸ்டாலின் பெற்றுள்ளார் என்பதை எண்ணி மகிழ்கிறேன். தாய்க்குலங்களை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார் முதல்வர். இந்த திட்டங்களுக்கு பக்கபலமாக இருப்பவர் தொல்.திருமாவளவன்.

அரியலூர் மாவட்டத்தில் தான் மொழிக்காக கீழப்பலூர் சின்னசாமி மரணமடைந்தார். மேலும், மாணவி அனிதா அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் மரணமடைந்தார். இந்தியாவில் மதிக்கப்படும் தலைவராக உயர்ந்திருக்கிறார். வட நாட்டு தலைவர்களும் அவரை அடையாளம் கண்டுள்ளனர். அவர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திராவிட இயக்கத்தின் பக்கபலமாக இருக்க வேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்துபவர் திருமாவளவன். இங்கே வந்து மோடி, நட்டாக்கள் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்கள். இந்தியில் எழுதி வைத்து பாதி திருக்குறளை பேசி எங்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆர்.என்.ரவி என்ற உளறுவாயன் ஆளுநர் உரையில் விஷத்தை கக்கி வருகிறார். அண்ணா, பெரியார், காமராஜர் உள்ளிட்டோர் பெயர்களை வாசிக்க மறுத்துவிட்டார். 5 மாடி ஹோட்டல் போல இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சாவர்க்கர் பிறந்தநாளில் திறந்துவைத்தார் மோடி. கோட்சேயின் கூட்டம் பகிரங்கமாக உலவுகின்றனர் இன்று. நமது மொழிக்கு மோடியின் வடிவில் ஆபத்து வருகிறது. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். தமிழ்நாடு இந்துத்துவ சக்திகளுக்கு மரண அடி கொடுக்கும்” என்றார்.