Skip to main content

நிலத்தடியில் துயில் கொள்ளும் சூரியன்... கலைஞருக்காக மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எழுதிய இரங்கல் கவிதை 

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
thamimun ansari


முத்தமிழ் கலைஞரே...
தமிழ் முத்தமிட்ட அறிஞரே...
 

நீங்கள் 
பெரியார் 
விட்டுச்சென்ற 
போர் முரசு!
அண்ணா 
அடையாளம் 
காட்டிச் சென்ற 
தமிழ் பேரரசு!
எம்ஜிஆர் 
ரசித்த 
கலையரசு!
 

நீங்கள் 
விளிம்புநிலை மக்களின் உரமாகவும்,
விடுதலைக்கு ஏங்கிய மக்களின் 
நிறமாகவும் இருந்தீர்கள்.
 

நீங்கள் 
எண்பது ஆண்டுகளை கடந்தது பொது வாழ்வில் அல்ல 
போர் வாழ்வில்..!



சமூக நீதியில் 
நீங்கள் காட்டிய 
வீரமும்,
பின்தங்கிய மக்களிடம் காட்டிய ஈரமும் 
அரசியலில் ஒரு வரமாகும்!
 

நீங்கள் 
இலக்கியம் பேசினால் 
அது தமிழருவி!
அரசியல் பேசினால் 
அது போர்க்கருவி!
 

நீங்கள் 
தந்த பராசக்தி
சமூகத்தை புரட்டிப் போட்ட கடப்பாரை!
ஏனெனில் 
நீங்கள் படித்தது 
தந்தை பெரியாரை!



உங்கள் உதட்டு சுழிப்பில் தமிழர்களை கொள்ளை கொண்டீர்கள்.
பரிவான பார்வையில் குடிசை மாற்று வாரியம் கண்டீர்கள்.
 

சமத்துவபுரம்,
வள்ளுவர் கோட்டம்,
பூம்புகார் கலைக்கூடம்,
அண்ணா மேம்பாலம்,
இவையெல்லாம் 
நீங்கள் நாட்டுக்கு தந்த தாம்பூலம்.
 

தமிழர்களுக்கு ஒரு இழுக்கு  என்றால் சவுக்கை தூக்குனீர்கள்.
தமிழுக்கு ஒரு அழுக்கு என்றால் எழுதுகோலை ஏந்துனீர்கள்.
 

நீங்கள் ஒரு வெப்பச்சூரியன்.
உங்கள் 
கதிர்வீச்சில் ஆதிக்க பூச்சிகள் நடுங்கின!
விஷப்பூச்சிகள் ஒடுங்கின!

உங்கள் மரபணுக்கள் மருத்துவமனையில் போராடியது. தோற்றது!
உங்கள் புகழுடல் மெரினாவுக்காக வாதாடியது!
இறுதியில் வென்றது!
 

நீங்கள் மறைந்துவிட்டீர்கள்.
தமிழர் தோட்டங்களில் பூக்கள் வாடுகின்றன.


உங்கள் அரசியல் எதிராளிகளும் வருந்துகிறார்கள்!


சூடான அரசியலையும்,
சுவையான விவாதங்களையும் இனி எப்போது காண்போம் என்று!
 


 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'நீங்கள் எல்லோரும் கலைஞரின் பேரன்கள் தான்' - தயாநிதி மாறனை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்!

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'You are all grandsons of the artist'- Udayanidhi campaign supporting Dayanidhi Maran

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி எழும்பூர் டாணா தெரு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''தயாநிதி மாறனை உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வாக்கு கேட்பதற்கு இங்கே வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னைவிட அதிக ஆர்வத்தோடு, எழுச்சியோடு அவரை வெற்றி பெறச் செய்வதில் நீங்கள் முனைப்போடு இருக்கிறீர்கள் என்பது. நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு. கடந்த 2019 தேர்தலில் தயாநிதிமாறனை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். அதற்கு நான் பலமுறை  நன்றி தெரிவித்திருக்கிறேன். நான் இந்த பகுதிக்கு வருவது இது முதல் தடவையோ, இரண்டாவது தடவையோ அல்ல. இந்த மூன்று வருடத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட முறை குறையாமல் இங்கே வந்திருக்கிறேன்  கொரோனா காலத்திலும் சரி, மழை வெள்ள காலத்திலும் சரி அனைத்து பிரச்சனையின் போதும் இங்கே வந்திருக்கிறேன்.

அந்த உரிமையோடு கேட்கிறேன் குறைந்தது 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தயாநிதிமாறனை வெற்றி பெற வைக்க வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் டெபாசிட் பெறக்கூடாது. நான் கலைஞர் பேரன் சொன்னதை கண்டிப்பாக செய்வேன். நீங்களும் நிறைவேற்ற வேண்டும். வேட்பாளரும் கலைஞர் பேரன் தான். கலைஞர் பேரனுக்கு கலைஞர் பேரன் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். இங்கு இருக்கும் அத்தனை பேரும் கலைஞரின் பேரன்கள் தான். நீங்கள் அத்தனை பேரும் பெரியாரின் பேரன்கள் தான், நீங்கள் அத்தனை பேரும் அண்ணாவின் பேரன்கள் தான். நாம் அனைவரும் கொள்கை பேரன்கள், லட்சிய பேரன்கள்'' என்றார்.

Next Story

'இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியம்' - தமிமுன் அன்சாரி பேட்டி

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
'It is necessary for the India coalition to come to power' - Tamimun Ansari interview

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி திமுக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இன்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து முதல்வரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி பேசுகையில், ''இந்த தேர்தலை பொறுத்தவரை மனிதனை ஜனநாயக கட்சி வெறும் அரசியல் காளமாக இதனைப் பார்க்கவில்லை.

மாறாக ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் இடையேயுமான சித்தாந்த போராட்டமாக பார்க்கிறது. அந்த அடிப்படையில் இந்த முடிவை மனிதநேய ஜனநாயக கட்சி எடுத்திருக்கிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து எங்களுடைய ஆதரவை வழங்கி இருக்கிறோம். இந்தியாவுடைய ஜனநாயகம், பன்முக கலாச்சாரம், அரசியல் சாசன சட்டத்துடைய மாண்புகள், சமூக நல்லிணக்கம் ஆகியவை காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது அவசியமாகிறது' என்றார்.