Skip to main content

தென்காசி வேட்பாளரின் வயது குளறுபடி! சர்ச்சையான பொன்னுத்தாய் விவகாரம்!

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

தேர்தல் ஆணையம் எத்தனை அஜாக்கிரதையாக வேலை பார்க்கிறது என்பதற்கு தென்காசி தொகுதியை உதாரணமாகச் சொல்லலாம். இங்கு திமுக வேட்பாளர் தனுஷ்குமார் உதயசூரியன் சின்னத்திலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் இரட்டை இலைச் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். 

 

ponnuthaai

 

டிடிவி தினகரனின் அ.ம.மு.க சார்பில் போட்டியிடுகிறார் சு.பொன்னுத்தாய். இவருக்குப் பரிசுப் பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தத் தொகுதியில் கோ.பொன்னுத்தாய், ம.பொன்னுத்தாய், ரா.பொன்னுத்தாய் என மேலும் மூன்று பொன்னுத்தாய்கள் களம் இறங்கியிருக்கின்றனர். மின்னனு இயந்திரத்தில் நான்கு பொன்னுத்தாய் பெயர்களும் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன. இதில் வில்லங்கம் என்னவென்றால், தினகரனின் அமமுக வேட்பாளருக்கு விழுகின்ற வாக்குகளைச் சிதறடிக்கும் வகையில், அதே பெயரில் உள்ள மூன்று  வேட்பாளர்களைச் சுயேச்சைகளாக சில கட்சிகள் களத்தில் இறக்கியிருப்பதுதான்.

 
மூன்று சுயேச்சை பொன்னுத்தாய்களில், கோ.பொன்னுத்தாய் என்பவர், தனக்கு 24 வயதுதான் ஆகிறது என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைக் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிய தேர்தல் ஆணையம், அவருக்குத் தொலைக்காட்சிப் பெட்டி சின்னம் ஒதுக்கியிருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால், இந்திய அரசியல் சட்டப்பிரிவு 84(பி) படி, 25 வயது பூர்த்தியானவர்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற அடிப்படை விஷயத்தைக்கூட,  தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிந்திருக்கவில்லை.  

 

ponnuthai

 

கோ.பொன்னுத்தாய்,  தான் ஒரு தையல் தொழிலாளி என்றும்,  தனக்கு மின்னஞ்சல் முகவரி இல்லை என்றும்,  பான்கார்டும் இல்லை, சொத்தும் இல்லை என்றும்,  வழக்கு எதுவும்  நிலுவையில் இல்லை என்றும்  வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். கையில் ரொக்கமாக ரூ.5000,  வங்கியில் இருப்பு ரூ.3000,  ரூ.90 ஆயிரம் மதிப்பிலான நகைகள்  என மொத்தம் ரூ.98 ஆயிரத்தை தனது சொத்து மதிப்பாகக் காட்டியிருக்கிறார்.  
 

வேட்புமனுவில் ஒரு புள்ளி விடுபட்டுப் போனால்கூட, அதைக் காரணம் காட்டி நிராகரித்துவிடுவார்கள் தேர்தல் அதிகாரிகள். கோ.பொன்னுத்தாய் விஷயத்திலோ, வயதையே கணக்கில் கொள்ளவில்லை. இது ஏனென்று தெரியவில்லை. அந்த மனுவும், மனுத்தாக்கல் நிறைவு பெறும் நாளான 26-ஆம் தேதி மாலை 3 மணிக்கு அவசரகதியில் வாங்கப்பட்டுள்ளது.

 
கோ.பொன்னுத்தாயிடம்,  வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு டயல் செய்து நாம் பேசியபோது, அவருடைய தந்தை இருளப்பன் லைனில் வந்தார்.   “புருஷன்கூட சண்டை போட்டுட்டு வந்து எங்க வீட்ல இருந்துச்சு. இப்ப அவரு  திரும்பவும் வந்து சண்டைபோட்டு எம்மகளைக் கூட்டிட்டுப் போயிட்டாரு. தேர்தல்ல நிக்கிறேன்னு சொல்லி என் நம்பரைக் கொடுத்திருச்சு. நெறய பேர் போன் பண்ணி கேட்கிறாங்க.” என்று சலித்துக்கொண்டார். 
 

பிரமாணப் பத்திரத்தில் முதல் பக்கத்தில் 24 வயது என்று குறிப்பிட்டுள்ளார் கோ.பொன்னுத்தாய். கல்வித்தகுதி விபரத்திலோ, 2010-ல் ப்ளஸ் 2 முடித்துள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். அதன்படி பார்த்தால், கோ.பொன்னுத்தாய்க்கு வயது 26 ஆகத்தான் இருக்கமுடியும். கோ.பொன்னுத்தாயின் வயது என்னவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். பிரமாணப் பத்திரத்தில் 24 வயது என்று குறிப்பிட்டது தவறுதானே?   வாக்காளர்களைக் குழப்பி, ஆளும் கட்சிக்கு எதிரான மாற்று அணிக்கு (அமமுக) வாக்குகள் விழுவதைத் தடுக்க வேண்டும் என்று ‘யாரோ’ பிறப்பித்த உத்தரவுக்குக் கட்டுப்பட்டே தேர்தல் ஆணையம் செயல்பட்டிருக்கிறது என்பதை கோ.பொன்னுத்தாய் விவகாரம் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.