Skip to main content

தற்காலிகமா? நிரந்தரமா? -யார் இந்த தற்காலிக சபாநாயகர்?

Published on 09/05/2021 | Edited on 09/05/2021
dddd


தமிழகத்தின் 16வது சட்டமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற 234 எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைக்கப்போகிறவர் யார் என்கிற கேள்வி எழுந்தது. இவர், அவர் என்கிற பரபரப்பு தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்காலிக சபாநாயகராக இருந்து சட்டசபையில் பதவி பிரமாணம் செய்து வைக்கப்போகிறார் கு.பிச்சாண்டி என கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு மே 10ஆம் தேதி பதவி பிரமாணம் செய்துவைக்கவுள்ளார் கவர்னர்.

 
தற்காலிக சபாநாயகராகப்போகும் கு.பிச்சாண்டி யார்?


திருவண்ணாமலை நகரத்தை சேர்ந்தவர் குப்புசாமி. டிரான்ஸ்போர்ட் தொழிலில் இருந்தார். அரசியல் ஆர்வம் கொண்ட குப்புசாமி திமுகவிலும் இருந்தார். 1980களில் திருவண்ணாமலை நகர மன்ற உறுப்பினராக ( கவுன்சிலர் ) இருந்தார். இவரின் மூத்த மகன் தான் பிச்சாண்டி. சிறிய வயதிலேயே தாயை இழந்தவர், இதனால் தாயின் பாசம் அறியாமல் தந்தையின் பாசத்தில் வளர்ந்தவர். பிச்சாண்டி பிறந்தபின்பு தான் தனக்கு அதிஷ்டம் வந்தது என மகன் மீது அதிக பாசத்தை வைத்திருந்தார் குப்புசாமி. இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார் குப்புசாமி. தனது சித்தியால் வளர்க்கப்பட்டார் பிச்சாண்டி.


திருவண்ணாமலையில் அக்காலத்தில் பிரதான பகுதிகளாக இருந்த சிவராத்திமடத்தெரு, சன்னதிதெரு, கார்காணத்தெருவில் அவருக்கு நண்பர்கள் அதிகம். நண்பர்கள் அந்த ஊக்கத்தால் 1984ல் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் போட்டியிட்ட பிச்சாண்டி நகர மன்ற உறுப்பினராக வெற்றிப்பெற்றார். அப்போது அவருக்கு நகரமன்ற துணை தலைவர் பதவிக்கான வாய்ப்பு வந்தபோது அதனை மறுத்துவிட்டார்.


அப்போது நகர செயலாளராக இருந்த டி.என்.பாபு, சாவல்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் சாவல்பூண்டி சுந்தரேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளராகவுள்ள அருள்குமரன் தந்தை அருணகிரி, மறைந்த முன்னால் ந.செ தியாகராஜன் போன்றோர் நட்பாகிறார்கள். அப்போது நகரமன்ற தலைவராக இருந்த முன்னால் எம்.எல்.ஏ முருகையன், தனது அரசியல்வாரிசாக பிச்சாண்டியை வளர்த்தார்.


ஈழத்தமிழருக்காக திமுக உருவாக்கிய டெசோ அமைப்பின் சார்பில் சென்னையில் பிரமாண்டமான ஊர்வலம் நடத்தியபோது, விடியவிடிய திமுக இளைஞரணி, தொண்டரணி ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாவட்ட இளைஞரணி நிர்வாகியாக இருந்த பிச்சாண்டியின் பங்கு அதிகம். திமுக மாநாடுகளில், கூட்டங்களில் வித்தியாசமான முறையில் இளைஞரணியை பங்கு பெறவைத்ததால் தலைமையின் கவனத்தை ஈர்த்தார்.


1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, திருவண்ணாமலை தொகுதியை திமுகவில் சிலர் கடுமையாக முயற்சி செய்தனர். திமுக தலைவராக இருந்த கலைஞரிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தி திருவண்ணாமலை தொகுதி வேட்பாளராக பிச்சாண்டிக்கு சீட் வாங்கி தந்தவர் முருகையன். முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு, எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திரன் என்பவரை 30 ஆயிரம் சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.


1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டார். இராஜிவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு, சீட் கிடைத்ததும் சேஷாத்திரி மடத்தை நிர்வகித்து வந்த பெண் சாமியாரியிடம் ஆசிப்பெற சென்றபோது, நீ இந்த தேர்தலில் தோற்றுவிடுவாய் எனச்சொன்னதை கேட்டுக்கொண்டு வந்துள்ளார். அதன்பின் ராஜிவ்காந்தி மரணம் நடைபெற்று திமுக படுதோல்வியை சந்தித்தது, அதில் பிச்சாண்டியும் தோல்வியை சந்தித்தார். தோல்வியடைவோம் எனத்தெரிந்தும் செலவு செய்வதிலும், வேலை செய்வதிலும் எந்த தொய்வும் ஏற்படவில்லை.  


1993ல் திமுகவில் இருந்து வை.கோ பிரிந்து சென்றபோது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய அளவில் சேதாரம்மில்லாமல் கட்சியை கட்டுக்குள் வைத்திருந்ததில் பிச்சாண்டியின் பங்கு அதிகம் என்பது கட்சி சீனியர்களின் கருத்து. மாவட்ட செயலாளராக, மண்டல செயலாளராக கட்சியில் பதவிகள் வகித்தார்.


1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கலைஞர் தலைமையிலான அமைச்சரவையில் வீட்டுவசதித்துறை அமைச்சராக்கப்பட்டார், சில சர்ச்சைகளிலும் சிக்கினார். அதன்பின்னர் 2001, 2006 தேர்தல்களில் அதே திருவண்ணாமலை தொகுதியில் இருந்து வெற்றிப்பெற்று எம்.எல்.ஏவானார்.


2011 தேர்தலின்போது புதியதாக உருவாக்கப்பட்ட கீழ்பென்னாத்தூர் தொகுதிக்கு மாறி அங்கு சீட் பெற்றார். அந்த தேர்தலில் உட்கட்சி சதியும், சாதியும் அவரை அந்த தொகுதியில் தோற்கடித்தது. 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதே கீழ்பென்னாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார். அப்போது சட்டமன்றத்தில் திமுக எதிர்கட்சியாக அமர்ந்தது. அதில் சட்டமன்ற துணை கொறடாவாக பிச்சாண்டியை திமுக தலைமை நியமனம் செய்தது.


2021ல் திமுக ஆளும்கட்சியாகியுள்ள நிலையில் பிச்சாண்டியின் ஆதரவாளர்கள் அவர் அமைச்சர் எனச்சொல்லி வந்தனர். இந்நிலையில் அவரை சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக்க திமுக தலைமை முடிவு செய்து கவர்னர்க்கு கடிதம் அனுப்பியது. அதன் அடிப்படையில் அவரை தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதுவரை 8 முறை சட்டமன்ற தேர்தலில் நின்று இரண்டு முறை தோல்வியை சந்தித்து 6 முறை வெற்றி பெற்றுள்ளார்.


வரும் மே 10ஆம் தேதி கவர்னர் மாளிகையில் தற்காலிக சபாநாயகராக பிச்சாண்டி பதவியேற்க உள்ளார். மே 11 ஆம் தேதி சட்டசபை கூடுகிறது. அதில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதன்பின் முறைப்படி சபாநாயகர் தேர்வு ஆளும்கட்சி – எதிர்கட்சியால் இணைந்து தேர்வு செய்து அந்த நாற்காலியில் அமரவைக்கப்படுவர்.


அரசியலில் அதிர்ந்து பேசாதவர், எதிர்கட்சியினரும் மதிக்கும் அளவுக்கு பக்குவமானாவர் என்கிற கருத்து அரசியல் வட்டாரத்தில் உண்டு. அவரை புகழ்ந்து பேசினாலும், இகழ்து பேசினாலும் அவரின் முகத்தில் இருந்து எந்த ரியாக்ஷனையும் யாராலும் அறிந்துக்கொள்ள முடியாது என்பது அவரின் ப்ளஸ். அதேநேரத்தில் பெரியதாக பேசமாட்டார் என்பது அவரது மைனஸ்.


தற்காலிக சபாநாயகராக அறிவிக்கப்பட்டுள்ள பிச்சாண்டி, பின்னர் முறைப்படி நடைபெறும் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வில் துணை சபாநாயகராக தேர்வு செய்யப்படவுள்ளார் என கூறப்படுகிறது. சபாநாயகராக திருநெல்வேலியை சேர்ந்த திமுக எம்.எல்.ஏ அப்பாவு தேர்வு செய்யப்படவுள்ளார் என்கிறார்கள். அப்பாவு சிறந்த பேச்சாளர், திறமையானர் வாத திறமையாளர். அதேநேரத்தில் பிச்சாண்டியை விட கட்சியில், சட்டமன்ற அனுபவத்தில் ஜீனியர். நீண்ட கால சட்டமன்ற அனுபவம், அமைச்சராக இருந்தது, துணை கொறடாவாக இருந்தவர் பிச்சாண்டி. சட்டமன்ற அனுபவம் இருந்தாலும் அமைச்சராகவோ, கொறடாவாகவே இல்லாதவர் அப்பாபு. கட்சியில், சட்டமன்ற அனுபவத்தில் ஜீனியரான அப்பாவு சபாநாயகர், சீனியரான பிச்சாண்டி துணை சபாநாயகரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

படம் - எம்.ஆர்.விவேகானந்தன்.

சார்ந்த செய்திகள்

Next Story

'பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி சாத்தியமா?' - அப்பாவு விளக்கம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
'MLA post for Ponmudi'-Speaker Appa's explanation

சொத்துக் குவிப்பு வழக்கில் மூன்றாண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நேற்று தீர்ப்பளித்திருந்தது. இதனால் மீண்டும் பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடராக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளார்.

நெல்லையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் கண்காட்சி இன்று தொடங்கியது. இதனை தமிழக சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், ''பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு ஒரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. மேல்முறையீடு செய்தார். நேற்று உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. உங்கள் எல்லோருக்கும் தெரியும் உயர்நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதிக்கு தண்டனை வழங்குமானால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி தண்டனை காலத்தை பொறுத்து அவர்கள் வைக்கிற பதவியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள். 

அதன் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி அவருடைய பதவியைத் தொடர்ந்து நீடிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நாங்கள்தான் போட்டோம். இப்பொழுது உச்சநீதிமன்ற தீர்ப்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பில் வழங்கப்பட்ட தண்டனை தடை செய்யப்பட்டதால் மீண்டும் அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும். எவ்வாறு வழங்குவோம் என்றால் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல், லட்சத்தீவு நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல், உத்தரப்பிரதேச மாநிலம் காசிப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அன்சாரி இவர்களுக்கு எல்லாம் என்னென்ன நடைமுறை சட்டத்தின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோ அதேபோல் பொன்முடிக்கும் பதவியை வாங்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Next Story

சபாநாயகரின் அதிரடி முடிவு; உச்சநீதிமன்றத்தை நாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்!

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Speaker's Action Decision; Congress MLAs sought the Supreme Court

இமாச்சலப்பிரதேசத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அம்மாநில முதல்வராக சுக்விந்தர் சிங் ஆட்சி செய்து வருகிறார். இங்கு மொத்தம் உள்ள 68 எம்.எல்.ஏக்களில், காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பா.ஜ.க.வுக்கு 25 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். மூன்று எம்.எல்.ஏக்கள் எந்தக் கட்சியையும் சேராத சுயேட்சை எம்.எல்.ஏக்களாக இருக்கின்றனர். இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையம் சார்பில் 15 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியுடன் காலியாகவுள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்பட 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 15 இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேசத்தில் 10, கர்நாடகாவில் 4, இமாச்சலப் பிரதேசத்தில் 1 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற்றது.

அந்த வகையில் இமாச்சலப்பிரதேசத்தில் காலியாக இருந்த ஒரு இடத்துக்கு ஆளும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும், எதிர்க்கட்சியான பா.ஜ.க சார்பில் ஒருவரும் என இருவர் போட்டியிட்டனர். ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்.எல்.ஏக்கள் இருந்தும், 25 எம்.எல்.ஏக்கள் கொண்ட பா.ஜ.க.வுக்கு 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். அதனால், பா.ஜ.க. வேட்பாளர் ஹர்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததால் அம்மாநில காங்கிரஸ் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான எம்.எல்.ஏக்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி காலை அம்மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியதாகக் கூறப்பட்டது. இதனையடுத்து இமாச்சலப்பிரதேச சட்டசபையில், நிதி மசோதா தாக்கல் செய்வதற்காக கடந்த மாதம் 28 ஆம் தேதி சட்டசபை கூடியது.

அப்போது, எதிர்க்கட்சி பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர்கள் கோஷங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டதாகவும், சபாநாயகர் அறையில் தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், பா.ஜ.க எதிர்க்கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் உட்பட 15 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை சபாநாயகர் கடந்த 1 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்வதாக அதிரடி உத்தரவிட்டார். மேலும் கட்சி மாறி பாஜகவுக்கு வாக்களித்த 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கீழ் ஹிமாச்சலப் பிரதேசத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.