Skip to main content

டாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம்? ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக்கை மூடிய பிறகு, வேறுவித ஆபத்து தமிழகத்தைச் சூழ்ந்து கொண்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது,சென்னையைச் சுற்றிப் பல இடங்களில் கள்ளச்சாராயம் சப்ளை செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தென்மாவட்டங்கள் வரை தற்போது அது பரவியிருப்பதாகக் கூறுகின்றனர். பெரும் பாலும் ஆங்காங்கே இருக்கும் ஆளும்கட்சிப் பிரமுகர்கள் இந்தப் பிஸ்னஸில் வரிந்து கட்டிக்கொண்டு இருப்பதாகக் கூறுகின்றனர்.சில இடங்களில் போலி மதுபானத் தொழிற்சாலைகளும் விறுவிறுப்பாக நடத்தப்படுகிறது. உயிருக்கு உலை வைக்கக் கூடிய ’ரெக்டிஃபைடு மெத்தனால்’ என்னும் ஸ்பிரிட்டை தண்ணீர் கலந்து, அப்படியே கள்ளச்சாராயமாக விற்பதாகவும் கூறுகின்றனர்.
 

admk


 

மேலும் சென்னையிலும் இந்த ரெக்டிஃபைடு மெத்தனால் குடிமகன்களைத் தள்ளாட வைத்து கொண்டிருக்கிறது என்கின்றனர். இப்படிப்பட்ட டேஞ்சரஸ் சரக்குகள் காய்கறி மற்றும் பால் வண்டிகள் மூலம் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வியபாரத்ததைத் தடுக்க முனைந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரை, சாராயக் கும்பல் துப்பாக்கியால் சுட்ட சம்பவமும் அதிர வைத்துள்ளது. பல இடங்களிலும் ஆளுந்தரப்பினர்தான் சரக்கு சப்ளை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.இது தொடர்பான ரிப்போர்ட் டி.ஜி.பி. திரிபாதி டேபிளில் வைக்கப்பட்டிருக்கிறது.இந்த விஷயத்தை அறிந்த அவர் சாராய சப்ளையைக் கட்டுப்படுத்த லோக்கல் சப்ளை பார்ட்டிகள் யாரையாவது என்கவுண்டர் பண்ணி, சாராயக் கும்பல்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கலாமா என்கின்ற ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் காக்கிகள் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.