Skip to main content

தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுமா அதிமுக?

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

தமிழகத்தில் நடந்து முடிந்த 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் இந்திய அளவில் மத்தியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் , அதிமுக கூட்டணி குறைவான மக்களவை தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ்18 தொலைக்காட்சி, டைம்ஸ் நவ், இந்தியா டுடே, சி வோட்டர் உட்பட அனைத்து முன்னணி செய்தி நிறுவனங்களும் தங்களது கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் நடந்த திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, பூந்தமல்லி, உள்ளிட்ட 22 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகவில்லை.

 

 

stalin

 

 

ஏற்கனவே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை  பார்த்து அதிர்ச்சியடைந்த அதிமுக. இருப்பினும் அந்த கணிப்பு முடிவுகளை உதாரணமாக வைத்து பார்க்கும் போது அதிமுக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுமா? என்ற கேள்வி அக்கட்சியினரிடையே எழுகிறது. அதே போல் மே-23 ஆம் தேதி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் மத்தியில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் திமுக கட்சி பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படுமா? தமிழகத்தில் எழும் இந்த கேள்விகள் அனைத்திற்கும் வாக்கு எண்ணிக்கை அன்று முடிவுகள் வெளியாகும். அதுவே மக்கள் அளித்துள்ள இறுதி தீர்ப்பு ஆகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.