Skip to main content

மக்களை பற்றிக் கவலைப்படுகின்ற ஆட்சி தமிழகத்தில் இல்லை- மு.க.ஸ்டாலின்!

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

நாங்குநேரி இடைத்தேர்தலின் பொருட்டு பிரச்சாரத்திற்காக வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இரண்டாம் நாளான இன்று தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் திரண்ட மக்களிடம் பேசியதாவது,
 

கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்க கூடியவர்கள் விவசாயம், பெண்கள் மேம்பாடு, நாட்டு மக்கள் குறித்து கவலைப்படாமல் இருந்து வருகின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்காக மகளிர் சுய உதவிக்குழு கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி, இந்த ஆட்சியில் சுய உதவி குழு இருக்கிறது ஆனால் மானிய கடன் வழங்குவதில்லை.

TAMILNADU NANGUNERI ASSEMBLY BYELECTION DMK MK STALIN

 

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும், 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்ததும் கலைஞர் தான். பெண்கள், விவசாயிகள் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது தி.மு.க. தற்போது தமிழகத்தில் நடக்கும் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாடத்தை, எச்சரிக்கையைப் புகட்ட வேண்டும்.

TAMILNADU NANGUNERI ASSEMBLY BYELECTION DMK MK STALIN


ஆட்சியை காப்பாற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துவிடக்கூடாது, என்பதற்காக கோடி கோடியாக பணம் கொடுத்து சட்டமன்ற உறுப்பினர்களை பிடித்து வைத்துள்ளனர். அதற்கு பணம் கொடுக்க ஊழல் செய்து கொண்டு இருக்கின்றனர் என்று நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரத்தில் திண்ணை பிரச்சாரம் மேற்கொண்டார் ஸ்டாலின். 


சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. அதனை பற்றி கவலைப்படாத இந்த அரசுக்கு பாடம் புகட்டுங்கள் என்றார். ஆளும் கட்சியினர் தான் மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும், ஆனால் எதிர்கட்சியாக இருக்க கூடிய நாங்கள் தான் ஆளும் கட்சி செய்ய வேண்டிய பணியை செய்து கொண்டிருக்கிறோம். அனைத்து துறைகளிலும் 40 முதல் 50 சதவீதம் கமிஷன் அடிக்கப்படுக்கிறது என்றார் சிவந்திபட்டியில் ஒரு சதவீதம் ஓட்டு அதிகமாக வாங்கியதால், அ.தி.மு.க. ஆட்சி அமைந்து விட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறியவர் ஓ.பன்னீர்செல்வம், தியானம் செய்து ஆவியுடன் பேசிவிட்டதாக கூறினார்.
 

TAMILNADU NANGUNERI ASSEMBLY BYELECTION DMK MK STALIN

தமிழகத்தில் முதல்வராக இருந்த காமராசர், எம்.ஜி.ஆர்., அண்ணா, கருணாநிதி உட்பட அனைவரும் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு இறந்தனர், அவர்கள் இறப்பில மர்மமில்லை, ஆனால் ஜெயலலிதா உயிரிழப்பில் மரணத்தை விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. மக்களை பற்றிக் கவலைப்படுகின்ற ஆட்சி தமிழகத்தில் இல்லை என்று பேசினார் ஸ்டாலின்.
 

TAMILNADU NANGUNERI ASSEMBLY BYELECTION DMK MK STALIN




 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.