Skip to main content

உங்களை பார்த்து எதிரிகள் தொடை நடுங்கிப் போவார்கள்... தமிழக எம்பிக்களுக்கு நாஞ்சில் சம்பத் செய்தி...

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

 

17வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள், நாடாளுமன்ற மக்களவையில் இன்று மக்களவை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். அப்போது அனைவரும் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.


 

திமுக எம்பிக்கள் பதவியேற்பின்போது தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க என்றனர். காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் காமராஜ் வாழ்க, ராஜிவ் காந்தி வாழ்க என்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அனைவரும் உலக தொழிலாளர்கள் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் வாழ்க பெரியார், வாழ்க அம்பேத்கார் என்று பதவி ஏற்றனர். ஐஜேகே பார்வேந்தர் தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க என்றார். அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார், வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., வாழ்க புரட்சித் தலைவி அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்றார்.

 

Nanjil Sampath


 

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்டார் இலக்கியவாதியும், நடிகருமான நாஞ்சித் சம்பத்.
 

''மதசார்பற்ற கூட்டணியில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேலி பேசியவர்கள் உண்டு. கிண்டல் புரிந்தவர்கள் உண்டு. அறுதிப் பெரும்பான்மையோடு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்ட காரணத்தினால் இவர்கள் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது என்று சபித்தவர்கள் உண்டு. 
 

ஆனால் இன்றைக்கு தமிழினத்தினுடைய மீட்பு வரலாற்றில் இந்த நாள் ஒரு நல்ல நாள். திமுக சார்பில் வெற்றி பெற்றவர்களும், தோழமை கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றவர்களும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்ததும், தேசிய காப்பு பிரமாணத்தை தமிழில் சொன்னதும் பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க என்று நாடாளுமன்றத்தில் முழங்கியதும் இன்றைக்கு தமிழர்கள் எப்பொழுதும் தனித்துவம் உள்ளவர்கள், எங்களை தவிர்க்கவும் முடியாது, எங்களை தகர்க்கவும் முடியாது என்பதை முதல் நாளிலேயே இன்று முரசு அறைந்ததைப்போலவே அறைந்து நிரூபித்திருக்கிறார்கள். 


 

அதிமுக சார்பில் வாகை சூடிய தம்பி ரவீந்திரநாத் குமாரும் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. அவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

வாகை சூடி தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துகளை எடுத்துக்கொள்கிற அதே நேரத்தில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால், மிக அழகாக அண்ணா சொல்வார், டெல்லியோடு மோத டெல்லியோடு யுத்தம் செய்ய டெல்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை உடைத்து நொறுக்க திமுக ஒரு படைக்கலனை அனுப்புகிறது என்று சொன்னார். அந்த படைக்கலனாக நீங்கள் மிளிர்வீர்கள். எதிரிகள் தொடை நடுங்கிப் போவார்கள். தமிழினத்தினுடைய உரிமையை மீட்டெடுக்கிற வரலாற்று பயணத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியை சாதிக்கப்போகிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாஞ்சில் சம்பத்தின் வாழ்த்துக்கள்''. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
1085 nominations accepted in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் - 36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் - 56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து திருவள்ளூர் -14, வட சென்னை - 49, தென் சென்னை - 53, மத்திய சென்னை - 32, ஸ்ரீபெரும்புதூர் - 32, காஞ்சிபுரம் - 13, அரக்கோணம் - 29, வேலூர் - 37, கிருஷ்ணகிரி - 34, தருமபுரி - 25, திருவண்ணாமலை - 37, ஆரணி - 32, விழுப்புரம் - 18, கள்ளக்குறிச்சி - 21, சேலம் - 27, நாமக்கல் - 48, ஈரோடு - 47, திருப்பூர் - 16, நீலகிரி - 16, கோயம்புத்தூர் - 41, பொள்ளாச்சி - 18, திண்டுக்கல் - 18, கரூர் - 56, திருச்சிராப்பள்ளி - 38, பெரம்பலூர் - 23, கடலூர் - 19, சிதம்பரம் - 18, மயிலாடுதுறை - 17, நாகப்பட்டினம் - 9, தஞ்சாவூர் - 13, சிவகங்கை - 21, மதுரை - 21, விருதுநகர் - 27, ராமநாதபுரம் - 27, தூத்துக்குடி - 31, தென்காசி - 26, திருநெல்வேலி - 26, கன்னியாகுமரி - 27 என மொத்தம் 1085 வேட்புமனுக்கள் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்தப்பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 

Next Story

தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
1749 nominations filed in Tamil Nadu
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 1403 பேர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதற்கான தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (28.03.2024) நடைபெற உள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் -  36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் -  56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.