Skip to main content

பணம் எப்போ வரும்? ரேஷன் கார்டுக்கு ரூபாய் 1000... யாருக்கு எப்போது கிடைக்கும்?

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

21 நாட்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தால் ஏழை-எளிய அன்றாட உழைப்பாளிகளின் வருமானம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மாதச் சம்பளக்காரர்களின் பாடும் பெரும் திண்டாட்டம்தான். தமிழக மக்களின் வாழ்வாதாரத்துக்காக ஒரு குடும்ப அட்டைக்கு தலா ஆயிரம் ரூபாய் நிதியாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஊரடங்கு நேரத்தில் 'இந்தத் தொகை எப்படி வழங்கப்படும்?' என்கிற கேள்வி எழுந்தது.

முதல்வரின் அறிவிப்பு வெளியானதுமே, சமூக வலைதளங்களில் ரேசன் கடைகளில் கூட்டத்திற்கு நடுவே நின்று 1000 ரூபாய் பணம் பெற்றுக்கொள்வது போன்று படங்கள் வெளியாக, பொதுமக்கள் உடனே ரேசன் கடைகளுக்கு சென்று, 'பணம் எப்போ வரும்? பணம் எப்போ வரும்?' என்று கேட்க ஆரம்பித்தனர். இதுக்காகவே கூட்டம் திரள்வதால் பலரிடையே அச்சமும் நிலவியுள்ளது. ''ஏப்ரல் முதல் தேதிக்கு பிறகுதான் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்'' என்று பல ரேசன் கடைகளில் சொல்லி வந்தார்கள். ஏப்ரல் 2ஆம் தேதி வழங்கப்படும் என்று சில இடங்களில் சொல்லி வந்தார்கள்.

 

ration shop



இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "கரோனா வைரஸினால் பொதுமக்கள் தனித்தனியே இடைவெளி விட்டு நின்று பணமும், பொருளும் வாங்கிச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு டோக்கன் கொடுத்து பொருளும் வழங்க முடிவு செய்திருக்கிறோம்.

மார்ச் மாத பொருட்களை ரேசன் கடைகளில் வாங்காமல் இருந்தால், பணம் கொடுத்து தற்போது வாங்கிக்கொள்ளலாம்.

அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் மற்றும் பொருட்கள் பெற விருப்பம் இல்லாதவர்கள் சிவில்சப்ளை இணையதளத்தில் அல்லது செயலியில் வாங்க விரும்பவில்லை என்று பதிவு செய்யலாம்.

அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களும் பொதுமக்களுக்கு நிதியுதவியை முறையாக விநியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என்றார்கள்.



இந்நிலையில், கூட்டுறவுத்துறை 26.3.2020 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை ரேசன் கார்டுகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்'' என்று தெரிவித்துள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமியின் அறிவிப்பு ஆறுதலைத் தருகிறது. அவர் கூறியுள்ள தகவலில், ''ஒவ்வொரு நியாயவிலைக் கடை ஊழியர் மற்றும் வருவாய்த்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கே ஆவணங்களுடன் நேரடியாக சென்று, ஆயிரம் ரூபாய் பணத்தினை தருவார்கள். அதனை அவர்கள் வாங்கிக்கொள்ள வேண்டும். இதனை வழங்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. பணம் பெற்றுக்கொண்டதும் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.

அதேபோல் நியாய விலைக்கடையில் அனைவருக்கும் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை எப்போது வேண்டுமானாலும் சென்று வாங்கலாம், கூட்டமாக இருக்கும்போது கடைக்கு செல்லாமல் இருக்கலாம். அரசு பின்பற்றக் கூறிய இடைவெளியில் நிற்க வேண்டும்'' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, இந்த ஆயிரம் ரூபாய் போதாது என்ற சர்ச்சை எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 31ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு வெளியிட்டு, அதற்கு நிவாரணமாக பொதுமக்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த, அடுத்த சில மணி நேரத்தில் பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறார். 31ஆம் தேதி வரையிலான வேலை நிறுத்தத்துக்கே, ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு என்ன செய்வது? என்று வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த எளிய மக்கள் புலம்பித் தவித்துக் கொண்டிருக்கையில், 21 நாட்கள் வேலையில்லாமல் முடங்கிக்கிடந்தால் அதுக்கு ஆயிரம் ரூபாய் எல்லாம் எம்மாத்திரம்? இதில் உள்ள சிக்கலை அரசு உணர வேண்டும். ஊரடங்கினால் எளிய மக்களின் பொருளாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை புரிந்துகொண்டு, அதற்கேற்ப நிதியுதவியை உயர்த்தி தர வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

தற்போதைய நிலையில், முதல் கட்டமாக 1000 ரூபாயை ஒவ்வொரு ரேஷன் கடையிலும் நூறு, நூறு பேருக்காகத் தரும்போது, பாதிப்படைந்தவர்களில் ஒரு சிலருக்கு முன்கூட்டியும், ஒருசிலருக்கு கடைசியாகவும் கிடைக்கக் கூடிய நிலை உள்ளது.

ஏப்ரல் 2ல் தொடங்கி 15 வரையிலான பண விநியோகத்தில் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் என்பது தெரியாத நிலையில், மக்கள் பொறுத்திருந்து தங்களுக்கான தொகையைப் பெறவேண்டிய சூழலில் இருக்கிறார்கள். இதற்கிடையே, கேஸ் மானியத்தை விட்டுக்கொடுப்பவர்கள் தாங்களாக முன்வந்து அறிவிக்கச் சொன்ன மத்திய அரசு போல, மாநில அரசும் தற்போதைய நிதி நெருக்கடி நிலையில், ரேஷன் கார்டுக்கான 1000 ரூபாயை விட்டுக் கொடுக்க நினைப்பவர்கள் பதிவு செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.