சர்தார் வல்லபாய் படேல் மற்றும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆகியோர் உருவ படங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இன்று இந்தியாவின் இரும்பு மனிதர் என்றழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 144 வது பிறந்ததினம் மற்றும் இரும்பு பெண்மணியாக கருதப்படும் முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் நினைவுதினம் ஆகியவை நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இந்திராகாந்தி மற்றும் படேல் படங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.