ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் தொடர்ச்சியாக 'அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம் - கையோடு கை கோர்ப்போம்' என்கிற மாபெரும் பரப்புரை இயக்கத்தை தொடங்கி வைக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி திரு.வி.க. சாலையில், அகில இந்திய காங்கிரஸ் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ராகுல் காந்தியின் கடிதம் மற்றும் பா.ஜ.க. அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு பட்டியல் அடங்கிய துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தார். இந்நிகழ்வில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.