Skip to main content

தி.மு.க.வைப் பற்றி ரிப்போர்ட் அனுப்பிய எல்.முருகன்... எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு போட்ட பா.ஜ.க.! 

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

bjp


கடந்த சனிக்கிழமை அதிகாலை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை திடீரென்று போலீஸ் கைது செய்ய, பின்பு ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இது பற்றி விசாரித்த போது, ஜெ’ ஆட்சிக் காலம் மாதிரி நள்ளிரவு கைது- அதிகாலைக் கைது என்று எடப்பாடி அரசும் ஆரம்பித்து விட்டது என்று கூறுகின்றனர். அன்பகத்தில், பிப்ரவரி 14-ல் நடந்த கலைஞர் வாசகர் வட்டக் கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, பட்டியல் இன மக்கள் பற்றிச் சொன்ன சில வார்த்தைகள் அப்போதே சர்ச்சையைக் கிளப்பியது. ஆர்.எஸ்.பாரதி அதற்கு வருத்தம் தெரிவித்த போதும், புகார் தெரிவிக்கப்பட்டு, எஃப்.ஐ.ஆரும் போடப்பட்டது. அது சம்பந்தமாக ஆர்.எஸ்.பாரதி போட்டிருந்த முன்ஜாமீன் மனு மே 27 ஆம் தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில்தான் 23 ஆம் தேதி அதிகாலையில் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். வழக்குப் பதிவாகி 100 நாள் கடந்த நிலையில் இந்தக் கைது நடந்திருக்கிறது.
 


அதாவது, "தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, அதுக்கு முதல் நாள்தான் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி இருந்தார். அவர், மாநில பா.ஜ.க. தலைவரான முருகனிடம், தி.மு.க.வில் நானும் சாதிய ஒடுக்கு முறையை அனுபவித்து இருக்கிறேன். ஆர்.எஸ்.பாரதி போல் பலரும் அங்கே சாதிய உணர்வோடு, பட்டியல் இனமக்களை நடத்துகிறார்கள் எனச் சொல்லியிருக்கிறார். உடனே முருகன், இதை பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவரான நட்டாவின் கவனத்துக்குக் கொண்டு போக, இதைத் தொடர்ந்து ஆ.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கும் படி, டெல்லியில் இருந்து எடப்பாடிக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதால தான் இந்த நடவடிக்கை என்கின்றனர்.
 

bjp


மேலும் எடப்பாடி அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதால்தான் தன்னைக் கைது செய்ததாக ஆர்.எஸ்.பாரதி கூறினார். தி.மு.க.வின் சட்டத் துறைச் செயலாளராக இருந்து சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையே சிறைக்கு அனுப்பும் அளவுக்கு செயல்பட்டவர் ஆர்.எஸ். பாரதி. தற்போது ஓ.பி.எஸ். துறை ஊழல்கள், வேலுமணியின் ப்ளீச்சிங் பவுடர் ஊழல்கள் தொடர்பாக டாக்குமெண்ட்டுகளைச் சேகரித்து வந்த நிலையில் கைது செய்ததாகவும் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணத்தை நிறுத்த முடியாது என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.
 


இதனையடுத்து 79 வயதாகும் ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்த தகவல் கிடைத்ததும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஷாக் ஆயிட்டார். அதைப் புரிந்து கொண்டு வில்சன் எம்.பி. உள்ளிட்ட தி.மு.க. வழக்கறிஞர்கள் கோர்ட்டில் கூடினார்கள். அதே நேரத்தில், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, இதனை அரசியல்ரீதியாக ஸ்ட்ராங்காக்க நினைத்தது. சட்ட ரீதியாக வழக்கு வலுப்படுவதை விரும்பவில்லை. தி.மு.க.வை தலித் விரோத கட்சியாகப் பிரச்சாரம் செய்து, தேர்தல் வியூகம் வகுக்க இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எடப்பாடி வியூகம். அதேநேரத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் விஷயத்தில் அவர் தனது கொங்கு பெல்ட்டின் மனநிலை பற்றி யோசித்துள்ளார். வழக்கைப் பலப்படுத்தினால், அது தன் ஏரியாவில் விவாதத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கும் என்பதால், ஆர்.எஸ்.பாரதிக்கான ஜாமீன் விஷயத்தில் பெரியளவில் எதிர்ப்பை அரசுத் தரப்பு காட்டவில்லை. இதன்மூலம் தன் மனநிலையை கொங்கு பெல்ட்டுக்கு எடப்பாடி தெரிவித்து விட்டார் என்று அவர் தரப்பில் உள்ளவர்கள் கூறிவருகிறார்கள். 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரூ.4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை” - நயினார் நாகேந்திரன்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
I have nothing to do with Rs. 4 crore Nayanar Nagendran

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்தார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்