Skip to main content

நோட்டாவுக்கே ஓட்டு... போராட்டம் பிரச்சாரம் பரபரப்பாகும் இடைத்தேர்தல்!

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

தேர்தல் பிரச்சாரம், மக்களின் கருப்புக் கொடி போராட்டம் என்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது நாங்குநேரி இடைத்தேர்தல். தொகுதிவாசிக்கே வேட்பாளர் வாய்ப்புத் தரவேண்டும் என்று ஒதுங்கி நின்ற காங். முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் மோகன் குமாரராஜா, தமிழரசன் உள்ளிட்ட அவர்களது ஆதரவாளர்களைச் சமாளிப்பதற்காக நாங்குநேரி வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியோ அவர்களிடம் போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.  உறவுகளும் அப்படிதான் வேட்பாளர் என்று வரும் போது நமக்கு கட்சிதான் முக்கியம். விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அவர்களை சமாதானப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டிய வகையில், ஊக்கப்படுத்திய பிறகே பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், வி.சி.க தலைவர் திருமாவளவனின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர் ரூபி மனோகரனுக்காக பரப்புரையை மேற்கொண்டனர்.

assembly byelection nanguneri congress party


 

assembly byelection nanguneri congress party



அ.தி.மு.க.வின் வேட்பாளரான நாராயணன் அய்யாவழி பக்தர். தொகுதியிலிருக்கும் 61,539 இந்து நாடார் பிரிவு மக்களின் வாக்குகளைக் குறி வைத்திருக்கிறார். ஆனால் அய்யாவழி பக்தர்கள் அனைத்து சமூகத்திலும் உள்ளனர். அது கை கொடுக்குமா என்பது கேள்விக்கான விஷயம். இதனிடையே அ.தி.மு.க. அமைச்சர்களான ராஜலட்சுமி, ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், உள்ளிட்ட அமைச்சர்கள் களக்காடு மற்றும் நாங்குநேரி யூனியன் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். பூத் கமிட்டியினரை விரைவுப்படுத்தும் பணியில் தீவிரமாகியுள்ளனர்.

assembly byelection nanguneri congress party

 

அதே சமயம், நெல்லை- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் முக்கியமான நகரம் நாங்குநேரி பல கிராமங்களைக் கொண்டது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சற்று ஒதுங்கியிருப்பதால், அந்த வழியாக நாள்தோறும் செல்கிற 96 அரசுப் பேருந்துகளில் 16 அரசுப் பேருந்துகள் மட்டுமே நாங்குநேரி ஊருக்குள் வந்து போவதால் போக்குவரத்து சிரமம். பல மாதங்களாக நாங்குநேரி மக்கள் கோரிக்கை வைத்தும், அது தீர்க்கப்படாததால் தற்போதைய சூழலில் நாங்குநேரி, மாவடி, மற்றும் மூலக்கரைப்பட்டி மகுதிமக்கள் தங்களின் ஊர்களில் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தேர்தல் புறக்கணிப்பல்ல, எங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த நோட்டாவுக்கே வாக்களிப்போம் என்று சொன்னதால் அவர்களை அமைச்சர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்கள். போராட்டம். பிரச்சாரமுமாய் கலந்து கலகலப்பாகிறது நாங்குநேரி இடைத்தேர்தல்.
 

assembly byelection nanguneri congress party




 

சார்ந்த செய்திகள்

Next Story

“உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் அறை விட்டுள்ளது” - பிரதமர் மோடி விமர்சனம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
PM Modi criticism Supreme Court has slapped the opposition parties in the face

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில், இரண்டாம் கட்டமாக இன்று பீகாரில் மீதமுள்ள 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

அதே வேளையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. விவிபேட் எந்திரத்தில் பதிவாகும் 100 சதவித ஒப்புகைச்சீட்டுகளையும் எண்ண உத்தரவிடக்கோரிய மனு மீது உச்சநீதிமன்றம் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கியது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) வாக்குகளை அவற்றின் வாக்காளர் சரிபார்க்கக்கூடிய ஒப்புகைச் (VVPAT) சீட்டுகள் மூலம் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ், ஆர்ஜேடி மற்றும் இதர இந்தியக் கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது, ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை கைப்பற்றுவதன் சாவடி மூலம் பறித்தனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால், அவர்கள் பழைய விளையாட்டை விளையாட முடியாது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பாவத்தை அவர்கள் செய்திருக்கிறார்கள்.

ஆனால் இன்று, நாட்டின் உச்ச நீதிமன்றம் சில மணி நேரங்களுக்கு முன்னதாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளின் முகத்தில் பலமாக அறை விட்டிருக்கிறது. நம் நாட்டின் வளங்களின் மீதான முதல் உரிமை, மத வேறுபாடின்றி, இந்த நாட்டின் ஏழைகளுக்குத்தான் உள்ளது.  இந்திய இந்துக்களை, தங்கள் ஓட்டு வங்கிக்காக, காங்கிரசு பாரபட்சமாக காட்டிய விதம் இன்று அம்பலமாகியுள்ளது. அவர்கள் உங்களின் உடைமைகளை, பெண்களின் மங்களசூத்திரங்களைக்கூட திருட விரும்புகிறார்கள். உங்கள் சொத்தை உங்கள் பிள்ளைகளுக்கு வாரி வழங்குவதை காங்கிரஸ் கட்சியினர் விரும்பவில்லை” என்று பேசினார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.