Skip to main content

நோட்டாவுக்கே ஓட்டு... போராட்டம் பிரச்சாரம் பரபரப்பாகும் இடைத்தேர்தல்!

Published on 09/10/2019 | Edited on 09/10/2019

தேர்தல் பிரச்சாரம், மக்களின் கருப்புக் கொடி போராட்டம் என்று அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிறது நாங்குநேரி இடைத்தேர்தல். தொகுதிவாசிக்கே வேட்பாளர் வாய்ப்புத் தரவேண்டும் என்று ஒதுங்கி நின்ற காங். முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவர் மோகன் குமாரராஜா, தமிழரசன் உள்ளிட்ட அவர்களது ஆதரவாளர்களைச் சமாளிப்பதற்காக நாங்குநேரி வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியோ அவர்களிடம் போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.  உறவுகளும் அப்படிதான் வேட்பாளர் என்று வரும் போது நமக்கு கட்சிதான் முக்கியம். விட்டுக் கொடுக்கக் கூடாது என்று அவர்களை சமாதானப்படுத்தி ஊக்கப்படுத்த வேண்டிய வகையில், ஊக்கப்படுத்திய பிறகே பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்கள், வி.சி.க தலைவர் திருமாவளவனின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர் ரூபி மனோகரனுக்காக பரப்புரையை மேற்கொண்டனர்.

assembly byelection nanguneri congress party


 

assembly byelection nanguneri congress party



அ.தி.மு.க.வின் வேட்பாளரான நாராயணன் அய்யாவழி பக்தர். தொகுதியிலிருக்கும் 61,539 இந்து நாடார் பிரிவு மக்களின் வாக்குகளைக் குறி வைத்திருக்கிறார். ஆனால் அய்யாவழி பக்தர்கள் அனைத்து சமூகத்திலும் உள்ளனர். அது கை கொடுக்குமா என்பது கேள்விக்கான விஷயம். இதனிடையே அ.தி.மு.க. அமைச்சர்களான ராஜலட்சுமி, ராஜேந்திர பாலாஜி, விஜய பாஸ்கர், உள்ளிட்ட அமைச்சர்கள் களக்காடு மற்றும் நாங்குநேரி யூனியன் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். பூத் கமிட்டியினரை விரைவுப்படுத்தும் பணியில் தீவிரமாகியுள்ளனர்.

assembly byelection nanguneri congress party

 

அதே சமயம், நெல்லை- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் முக்கியமான நகரம் நாங்குநேரி பல கிராமங்களைக் கொண்டது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சற்று ஒதுங்கியிருப்பதால், அந்த வழியாக நாள்தோறும் செல்கிற 96 அரசுப் பேருந்துகளில் 16 அரசுப் பேருந்துகள் மட்டுமே நாங்குநேரி ஊருக்குள் வந்து போவதால் போக்குவரத்து சிரமம். பல மாதங்களாக நாங்குநேரி மக்கள் கோரிக்கை வைத்தும், அது தீர்க்கப்படாததால் தற்போதைய சூழலில் நாங்குநேரி, மாவடி, மற்றும் மூலக்கரைப்பட்டி மகுதிமக்கள் தங்களின் ஊர்களில் கருப்புக் கொடி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தேர்தல் புறக்கணிப்பல்ல, எங்களின் அதிருப்தியை வெளிப்படுத்த நோட்டாவுக்கே வாக்களிப்போம் என்று சொன்னதால் அவர்களை அமைச்சர்கள் சமாதானப்படுத்தி வருகிறார்கள். போராட்டம். பிரச்சாரமுமாய் கலந்து கலகலப்பாகிறது நாங்குநேரி இடைத்தேர்தல்.
 

assembly byelection nanguneri congress party




 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.