நேற்று, கோவில்பட்டியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் காரியாலய திறப்பு விழாவில் பாஜகவின் தமிழக தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார். அப்போது அவர்,
ADVERTISEMENT
5 முறை தமிழகத்தில் முதல்வராக இருந்த கலைஞர் ஏன் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவரவில்லை? ஏனென்றால், தமிழ் மொழியை வளர்க்கிறேன், வளர்கிறேன் எனக் கூறி, கனிமொழியைத்தானே அவர்கள் வளர்த்தார்கள். கனிமொழி இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர். நான் இந்த மண்ணின் மகள். என்னைக் கறுப்பாக இருக்கிறேன் என்று சமூக வலைதளங்களில் கேலி செய்கின்றனர். இது பனங்காட்டுக்கே உரிய கறுப்பு. இந்த பனங்காட்டுக்காரி எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன் என்றார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments