ஊழலையும், லஞ்சத்தையும் இரண்டறக் கலந்த விஞ்ஞானபூர்வ... -தமிழிசை சவுந்தரராஜன்

இன்று காலை தூத்துக்குடியில் மே தின பேரணி நடந்தது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். பேரணி முடிந்தபின் பேசிய அவர், மோடி காவலாளி இல்லை களவாணி, திமுகதான் மக்களின் காவலாளி எனக்கூறினார். இதற்கு பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டின் பிரதமரை களவாணி என தரம் தாழ்ந்து விமர்சிக்கும் ஸ்டாலினை கண்டிக்கிறோம் ஆட்சி அதிகாரத்தில் ஊழலையும், லஞ்சத்தையும் இரண்டறக் கலந்த விஞ்ஞானபூர்வ ஊழல் களவாணிகள் இத்தகைய விமர்சனம் செய்வதை மக்கள் ஏற்கமட்டார்கள் மடியில்கணமிருப்பதால்தானே காவலாளி களவாணியாக உங்கள் கண்களுக்கு தெரிகிறார்?

stalin Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe