Skip to main content

“தமிழக பொறுப்பாளர்கள் எதுவும் செய்யவில்லை; ஏதாவது செய்துவிட்டு வாக்கு கேளுங்கள்” - கே.எஸ்.அழகிரி

Published on 11/06/2023 | Edited on 12/06/2023

 

“Tamil officials did nothing; Do something and ask for votes” - KS Alagiri

 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசு என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது அப்பட்டமான பொய் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஊழல் நிறைந்த அரசாங்கம் என தற்போதைய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது அப்பட்டமான பொய். மன்மோகன் சிங் போன்ற நேர்மையான நியாயமான பிரதமராக ஒரு காலத்திலும் மோடி இருக்க முடியாது. அவர் மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. நீதி விசாரணையும் கிடையாது. 2ஜி வழக்கு குற்றச்சாட்டில் அப்பாவியான ராஜா, கனிமொழி மீதும் அந்த குற்றத்தை சுமத்தினர். அன்றைக்கு அதிகாரியாக இருந்த ராய் தவறான புள்ளி விவரங்களை கொடுத்தார். ஆனால் அந்த குற்றச்சாட்டு மிக வேகமாகப் பரவி நாங்கள் ஆட்சியை இழந்தோம். சிபிஐ அந்த வழக்கை விசாரித்த போது அதன் நீதிபதி ஷைனி கூறுகையில், ‘நானும் 2 ஆண்டுகள் இந்த நீதிமன்றத்தை திறந்து வைத்து கொண்டு அமர்ந்திருக்கிறேன். 2ஜி வழக்கில் குற்றம் சுமத்தியவர்கள் ஏதாவது ஒரு ஆதாரத்தோடு வருவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால் வரவில்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்’ என்று தள்ளுபடி செய்தார். இதில் ஒரு காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ந்தது. திமுக அங்கம் வகித்த அரசு வீழ்ந்தது. அப்பாவியான ராஜா, கனிமொழி குற்றம் சாட்டப்பட்டனர். வினோத் ராய் ஓய்வு பெற்ற பிறகு மத்திய அரசில் பெரும் பதவி வழங்கப்பட்டது. பழிவாங்குகிற நடவடிக்கை நடைபெற்றது. ஊழல் நிரூபிக்கப்படவில்லை.

 

மத்திய அரசு தமிழகத்திற்கு 9 ஆண்டுகளில் என்ன செய்திருக்கிறது என்ற முதல்வர் கேள்விக்கு, நாங்கள் 58 ஆயிரம் கோடி ரூபாய் நெடுஞ்சாலைக்காக கொடுத்திருக்கிறோம் என அமித்ஷா பதில் சொல்லியுள்ளார். அது தவறானது. அது வழக்கமாக வழங்கப்படும் தொகை. ஒரு மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை எங்கெங்கு உள்ளதோ அதனுடைய மேம்பாட்டிற்காக பணிகளுக்காக வழங்கப்படும் தொகையாகும். 9 ஆண்டுகளில் புதிதாக எந்த திட்டத்திற்கும் நிதி வழங்கப்படவில்லை. பெங்களூர் - சென்னை அதி விரைவு ரயில் திட்டம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அறிவிக்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில் 10 எக்ஸ்பிரஸ் சாலைகள் அமைத்துள்ளார்கள். தமிழகத்தில் ஒரு எக்ஸ்பிரஸ் சாலை கூட அமைக்கப்படவில்லை. தமிழகத்தில் எங்களது ரயில்வே திட்டமான சென்னை - மகாபலிபுரம் - கடலூர் ரயில் திட்டம், திண்டிவனம் - செஞ்சி - நகரி புதிய ரயில்வே திட்டம், திண்டிவனம் - திருவண்ணாமலை ரயில்வே திட்டம் ஆகியவை அப்படியே நிறைவேற்றப்படாமல் உள்ளன. விருதுநகர் - மதுரை சாலை திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. ஆனால் 2 லட்சம் கோடிக்கு மும்பை - குஜராத் வழியாக தில்லி செல்லும் சாலை திட்டத்தை அமைத்துள்ளீர்கள். தமிழகத்திற்கு துரும்பு கூட செய்யவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு 7 ஆண்டுகளாக கட்டடம் கட்டப்படவில்லை. ஆனால் தமிழகத்திற்கு வந்துள்ள அமித்ஷா தவறான தகவல்களை, உண்மைக்கு புறம்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

 

“Tamil officials did nothing; Do something and ask for votes” - KS Alagiri

 

ஒரு தமிழர் பிரதமாக வருவார் என்று சொல்லுகிறார். எங்களுக்கு அந்த ஆசை உண்டு. என்ன அண்ணாமலை அல்லது முருகனை பிரதமராக கொண்டுவரப் போகிறீர்களா? இதை நாளைக்கு செய்யலாமே. யாரை கொண்டு வருகிறீர்கள் எனச் சொல்லுங்கள் நாங்கள் ஆதரிக்கிறோம். எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. இதைவிட அப்பட்டமான பொய் காமராஜர், மூப்பனார் பிரதமராக வருவதை திமுக தடுத்ததாகக் கூறியுள்ளது. காமராஜர் பிரதமர் பதவிக்கு ஆசைப்பட விரும்பாமல் இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரை பிரதமராக்கினார். தற்போது கருணாநிதி, முரசொலி மாறன் உயிரோடு இல்லை. ஆனால் அப்போது கருணாநிதி மாறனை அனுப்பி மூப்பனாரிடம் பிரதமர் பதவி விருப்பம் குறித்து கேட்ட போது, அதற்கு மூப்பனார் கடுமையாக மறுத்துவிட்டார். லாலுபிரசாத் யாதவ் நேரடியாக மூப்பனாரிடம் பேசிய போது பிரதமர் பதவி வேண்டாம் என மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். எனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா பொய் சொல்லக்கூடாது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 25 தொகுதிகளில் வெற்றியடையும் எனக் கூறுகிறார். தமிழகத்தில் பலமான இயக்கமாக அதிமுக இருந்த போது கூட்டணி வைத்து 4 தொகுதிகளில்தான் வெற்றி பெற முடிந்தது. தற்போது தமிழகத்திற்கு 25 தொகுதியில் வெற்றி பெற இடமில்லை. தமிழக பொறுப்பாளர்களான மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. ஏதாவது செய்துவிட்டு வந்து வாக்கு கேளுங்கள்.

 

“Tamil officials did nothing; Do something and ask for votes” - KS Alagiri

 

வெளிநாட்டில் சென்று ராகுல் காந்தி இந்தியாவை விமர்சிக்கவில்லை. செய்தியாளர்கள் மோடியை பற்றி கேட்ட போது மோடியைத்தான் விமர்சித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சிக்கு ராகுல் காந்திக்கு அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இலக்கு. யார் பிரதமராக வரக்கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். இந்தியாவில் மதச்சார்பற்ற அணியின் முன்னணி தலைவராக உள்ளார். எனவே ஸ்டாலினை குறி வைத்து அவரது ஆட்சியில் ஊழல் நடைபெறுகிறது எனக் கூறுகின்றனர். ஸ்டாலினை அப்புறப்படுத்தும் முயற்சியில் அமித்ஷா ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு தனி பட்ஜெட் போடப்பட்டு பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு சிறுவன் 2 இஸ்லாமியர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். பாஜக ஆளும் மாநிலங்களை விட தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது” என்றார்.

 

பேட்டியின் போது  கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி.செந்தில்நாதன், நகரத் தலைவர் தில்லை ஆர்.மக்கின், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட துணை தலைவர் ராஜா.சம்பத் குமார், நகர செயல் தலைவர் தில்லை கோ.குமார்,  மாவட்ட செயலாளர் ஆர்.வி.சின்ராஜ், ஆர்.சம்பந்த மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.