Advertisment

திருச்சியில் பொதுக்கூட்டம்; தமிழகம் முழுவதும் தொடர் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர்

Tamil Nadu Chief Minister Stalin starts election campaign in Trichy today

நாட்டின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மாதம் ( ஏப்ரல்) 19 ஆம் ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும், பா.ஜ.க., பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் 3 ஆவது அணியாகவும் போட்டியிடுகின்றன.

Advertisment

நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை அடைந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. தி.மு.க. சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர்கள் பட்டியலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை திருச்சியில் தேர்தல் பிரச்சாரம் தொடங்குகிறார் முதல்வர். இதற்கான பொதுக்கூட்ட மேடை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கு மாலை 5 மணிக்கு நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு, திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ உள்ளிட்டோரை அறிமுகம் செய்து வைத்து வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்றுகிறார்.

இதில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர். முன்னதாக சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து அவர் சாலை மார்க்கமாக சிறுகனூர் பிரச்சாரக் கூட்ட மைதானத்துக்கு செல்கிறார். பிரச்சார பொதுக்கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் செல்கிறார். பின்னர் தஞ்சை, நாகை பகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து சனிக்கிழமை பிரச்சாரம் செய்கிறார்.

தொடர்ச்சியாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர், வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கடலூர், விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, கோவை, பொள்ளாச்சி, திருவள்ளூர், வடசென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்ச் 25,26,27,29,30,31 மற்றும் ஏப்ரல் 2,3,5,7,6,9,10,12,13,15,16 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் செய்கிறார். இறுதியாக ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னையில் வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். மொத்தம் 20 நாட்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

trichy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe