Skip to main content

தமிழ்நாடு பட்ஜெட்; அதிமுகவினர் தொடர் அமளி

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Tamil Nadu Budget; The AIADMK continues to fight

 

தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் வாசிக்க ஆரம்பித்த பொழுதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் தாக்கல் செய்தார்.

 

2023 -2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் வகையில் நிதியமைச்சர் முன்வரிசையில் நின்று படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிதியமைச்சர் தனது உரையை துவங்கும் போதே அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். “கொஞ்சம் அமைதியாக இருங்கள். பட்ஜெட் வாசிக்கட்டும். அதன் பின் பேசலாம். உங்களுக்கு பேசுவதற்கு நேரம் தருகிறேன்” என சபாநாயகர் கூறியும் அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். 

 

அதிமுகவினரின் அமளிக்கிடையே தொடர்ந்து பட்ஜெட் வாசிக்கப்பட்டது. இருந்தபோதும் தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதன்பின் சபாநாயகர் அப்பாவு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வாசித்த பட்ஜெட்டை தவிர எதுவும் அவைக்குறிப்பில் ஏறாது எனக் கூறினார்.

 

முன்னதாக, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்