Skip to main content

குனிந்து, கும்பிட்டு பதவி... என் மீது புழுதி வாரி வீசுகின்றனர்: ஈ.பி.எஸ்., செந்தில்பாலாஜி வாக்குவாதம்

Published on 04/07/2019 | Edited on 04/07/2019


   
தமிழக சட்டசபையில் இன்று மின்துறை, மதுவிலக்கு மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. 
 

அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி: தமிழகத்தின் எதிர்கால தலைமை என மு.க.ஸ்டாலின். கடைசியாக பேசியபோது நான் குனிந்து, தவழ்ந்து பதவியை பெறவில்லை.


 
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்: செந்தில்பாலாஜி அ.தி.மு.க.வில் இருந்தபோது எப்படியெல்லாம் பேசினார். எப்படியெல்லாம் குனிந்தார் என்பது தெரியாதா?
 

மு.க.ஸ்டாலின்: எங்கள் கட்சி உறுப்பினர் புகழ்ந்துதான் பேசினார். இதில் நீங்கள் இடைமறிக்கலாமா?


 

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி: செந்தில்பாலாஜியை பற்றி இதே எதிர்கட்சி தலைவர் 2.4.2013 அன்று சட்டசபையில் என்ன பேசினார்? வெளியில் சென்று என்ன பேசினார்? என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரே வருடத்தில் 3 சின்னங்களில் போட்டியிட்டவர்தான் செந்தில்பாலாஜி. முதலில் ம.தி.மு.க., பிறகு அ.தி.மு.க., பின்னர் அ.ம.மு.க. தற்போது தி.மு.க. என பல கட்சிகளுக்கு மாறி மாறி சென்று கொண்டிருப்பவர்தான் செந்தில்பாலாஜி.
 

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: நாங்கள் அன்புக்காகத்தான் குனிந்து வணங்குகிறோம். செந்தில் பாலாஜி குனிந்து பதவி பெற்ற புகைப்படங்களும் ஏராளம் உள்ளன. அதை கொடுத்தால் அவை நிறைந்து விடும். ஜெயலலிதாவை பார்த்து செந்தில்பாலாஜி எத்தனை முறை குனிந்து கும்பிடு போட்டார் என எங்களுக்கு தெரியும். 


 

eps-Senthil Balaji



முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி: ஆள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டவர் என்று விமர்சித்தவரைத்தான் இப்போது நீங்கள் (தி.மு.க.வின்) வேட்பாளராக நிறுத்தி அவைக்கு அனுப்பி உள்ளீர்கள். நாங்கள் அன்புக்குத்தான் அடிமை. கட்சி மாறி வந்தவர்கள் இல்லை. குனிந்து போனார்கள் என்ற வார்த்தைக்கு எதிர்வாதம் செய்ய தயாராக இல்லை. இது வருத்தமாக உள்ளது.
 

மு.க.ஸ்டாலின்: அதிமுக பிளவுப்பட்டபோது ஓ.பன்னீர்செல்வம் பேசியதை தற்போது குறிப்பிட்டால் என்னவாகும்?
 

அமைச்சர் ஜெயக்குமார்: ஜனநாயகத்தில் சிலர் கட்சி மாறுவது பழக்கம். அந்த வகையில், சில வார்த்தைகளை செந்தில் பாலாஜி பேசுகிறார்.
 

செந்தில் பாலாஜி: நான் 5 கட்சி மாறியவர் என்று முதல்வர் சொல்கிறார். இதை நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகுவேன். அந்த சவாலை சந்திக்க தயாரா.
 

எடப்பாடி பழனிசாமி:- ஒரு ஆண்டில் 3 முறை இரட்டை இலைக்கு இவருக்காக பிரசாரம் செய்தோம். ஆனால் மாற்று கட்சிக்கு சென்றதும் மனசாட்சியை மறந்துபேசி வருகிறார். நீங்கள் எந்தெந்த கட்சிகளுக்கு சென்றீர்கள்?


அமைச்சர் தங்கமணி: யார் வேண்டுமானாலும் கட்சி மாறலாம். வேறு கட்சிக்கு செல்லும்போது பெயர் மாற்றியது இவர்தான்.
 

செந்தில்பாலாஜி: என் மீது புழுதி வாரி வீசுகின்றனர். இதனால் நான் பதில் சொல்கிறேன்.
 

எடப்பாடி பழனிசாமி: இவருக்காக தேர்தலில் இரவு பகலாக உழைத்தோம். அது அவருக்கும் தெரியும். இடைத்தேர்தலில் உழைத்ததால்தான் வெற்றி பெற்றது.
 

செந்தில்பாலாஜி இருக்கும் இடத்துக்கு தக்கவாறு பேசுகிறார். எங்களைப் பற்றி பேசினால் நாங்கள் அவரை பற்றி பேசுவோம்.
 

செந்தில்பாலாஜி: என் தாய்-தந்தை வைத்த பெயரை மாற்றி கொள்வது எனது தனிப்பட்ட உரிமை. (இவ்வாறு கூறிவிட்டு போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெயர் மாற்றியதை சூசகமாக குறிப்பிட்டார்)


 

1984 முதல் அதே கட்சியில் இருந்துகொண்டுதான் பாஸ்கர் என்ற பெயரை விஜயபாஸ்கர் என்று மாற்றினேன். வேறு கட்சிக்கு போய் பெயர் மாற்றவில்லை.
 

உறுப்பினர் அவரது கட்சி பற்றி பேசுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மற்றவர்கள் மனம் புண்படும்படி பேசும்போதுதான் பிரச்சனை வருகிறது. குனிந்து குனிந்து என்ற வார்த்தைகளை சொல்லும்போது அதற்கு அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டி உள்ளது.
 

மு.க.ஸ்டாலின்:- செந்தில்பாலாஜி யார் பெயரையும் குறிப்பிட்டு பேசவில்லை.
 

எடப்பாடி பழனிசாமி:- எல்லா மனிதர்களுக்கும் உணர்ச்சி உள்ளது. மரபுகளை மீறி தேவையில்லாமல் பேசும்போது யாராக இருந்தாலும் உணர்ச்சி வசப்படத்தான் செய்வார்கள் என்று கூறி விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.

Next Story

''உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது''- உறுதியளித்த உதயநிதி 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 ``What is your mind voice asking?''-Udhayanithi assured

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அதன்படி, அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி அவர் பேசுவையில், ''நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே அறிமுகப்படுத்திய திட்டம் காலை உணவு திட்டம். காலையில் எழுந்து நீங்கள் சீக்கிரம் வேலைக்கு போய் விடுவீர்கள். குழந்தைக்கு சாப்பாடு ஊட்ட நேரம் இருக்காது. மதிய உணவு திட்டத்தில் சாப்பிட்டுக்கொள் எனச் சொல்லி அனுப்பிவிடுவீர்கள். ஆனால் உங்களுக்கு நினைவெல்லாம் குழந்தையைப் பசியோடு அனுப்பி வைத்தோமே சாப்பிட்டார்களோ இல்லையோ, பசி மயக்கத்தில் இருப்பார்களே, பள்ளிக்கூடத்திற்கு போனார்களா, தூங்கி விட்டார்களா? என்றெல்லாம் நினைப்பீர்கள். ஆனால் முதல்வர் அதற்காக கொண்டு வந்த திட்டம் தான் முதலமைச்சருடைய காலை உணவு திட்டம். இந்தத் திட்டத்தின் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய 31 லட்சம் மாணவர்கள் தினமும் காலை முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகிறார்கள். இந்த மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் முதல்வர் காலை உணவு திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நிம்மதியாக அனுப்புகிறீர்கள் 'என் பையனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பினால் போதும் அவனுக்கு காலையில் தரமான உணவு கொடுத்து கல்வியைக் கொடுப்பார்கள். திராவிட மாடல் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்' எனத் தைரியமாக அனுப்புகிறீர்கள். இதற்குப் பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு. இந்தத் திட்டத்தையும் சிறப்பான திட்டம் என்று சொல்லி தெலுங்கானா, கர்நாடக மாநில அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு சென்றுள்ளார்கள். அவர்களுடைய மாநிலத்தில் விரிவுபடுத்துவதற்கு. இங்க மட்டும் அல்ல கனடா நாடு தெரியுமா... அமெரிக்கா பக்கத்தில் இருக்கின்ற கனடா நாடு, பணக்கார நாடு. அந்த நாட்டின் பிரதம மந்திரி பெயர் ஜஸ்டின். அவர்  ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் 'உலகத்திலே மிகச் சிறந்த திட்டம் முதலமைச்சர் காலை உணவு திட்டம் தான். பள்ளி குழந்தைகளைப் பள்ளிக்கூடத்திற்கு வர வைப்பதற்கு இதை விட சிறப்பான திட்டம் எங்குமே இல்லை' என்று சொல்லி கனடா நாட்டில் காலை உணவு திட்டத்தை அமல்படுத்தி உள்ளார்கள். இதற்கு பெயர்தான் அம்மா திராவிட மாடல் அரசு.

அடுத்து நீங்கள் என்ன கேட்கப் போகிறீர்கள் என்று தெரியும். மகளிர் எல்லாம் வந்திருக்கிறீர்கள் உங்கள் மைண்ட் வாய்ஸ் என்னவென்று நல்லா கேட்கிறது. அதுதான் இன்று தேதி 16. கலைஞர் உரிமைத் தொகை திட்டம் தேர்தல் 2021 தேர்தலில் முதல்வர் வாக்குறுதி அளித்தார். தகுதிவாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று சொன்னோம். கடும் நிதி நெருக்கடி. ஒன்றிய அரசு நமக்கு காசு தரவே மாட்டேன் என்கிறார்கள். இருந்தாலும் தமிழக முதல்வர் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க சொன்னார். விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா? ஒரு கோடியே அறுபது லட்சம் பேர். அதில் சரி பார்த்து வெரிஃபிகேஷன் செய்து ஒரு கோடியே 18 லட்சம் மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இப்பொழுது வரை போய்க்கொண்டிருக்கிறது. சில இடங்களில் குறை இருக்கிறது. எனக்கு வரவில்லை, பக்கத்து வீட்டு பொண்ணுக்கு வந்துவிட்டது. எதிர் வீட்டு பெண்ணுக்கு வந்து விட்டது எனக் குறைகள் இருக்கிறது. அது சரி செய்யப்படும். தேர்தல் நேரம் நானும் நிதியமைச்சரும் தான் அதற்கு பொறுப்பு. கண்டிப்பாக இன்னும் 5 மாதங்களில் நிச்சயம் தகுதி வாய்ந்த இல்லத்தரசிகள் அத்தனை பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் நிச்சயம் கொடுப்பார். ஒரு கோடியே 18 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகைத்கொடுக்க மனசுள்ள முதலமைச்சர் இன்னும் ஒரு 40 லட்சம் மகளிருக்கு கொடுக்க மாட்டாரா?'' என்றார்.