Advertisment

நீ எனக்குக் கடவுள் அல்ல... அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் பா.ரஞ்சித் அதிரடி!

அண்ணல் அம்பேத்கரின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து - மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் சமத்துவம் என்ற உணர்வையும், தத்துவத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்திய அண்ணல் அம்பேத்கரின் 129-வது ஆண்டு பிறந்தநாளில் அவரது கொள்கைகளை, இலக்குகளை நினைவுகூர்வோம் என்றும் கூறியுள்ளார்.

Advertisment

Advertisment

ranjith

இந்த நிலையில் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் அண்ணல் அம்பேத்கரின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "உன் நேசிப்பின் சூட்டில் விழித்தெழுந்த பறவை நான்! என் வறண்ட நிலத்தின் முதல் மழை நீ! நீ எனக்கு கடவுள் அல்ல..என் ஆயுதம்!!! உன் பிறந்த நாளில் மட்டும் அல்ல...எப்போதுமே! உன் அருகாமையில் இருப்பது தான் என் வாழ்வு முழுமைக்குமான வழி!!! #JaiBhim" என்று குறிப்பிட்டுள்ளார்.

ambedkar birthday cinema director pa.ranjith Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe