Skip to main content

கொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அ.தி.மு.க. அரசு... வேல்முருகன் கடும் தாக்கு... 

Published on 31/05/2020 | Edited on 01/06/2020

 

T. Velmurugan


கொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அ.தி.மு.க. அரசைத் தூக்கியடிக்கத் தயாராவீர் தமிழக மக்களே, எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி எனக் கூறியுள்ளார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்.
 


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 


அது ஒரு காலம் கண்ணே, கார் காலம்!.... இது கவிப்பேரரசின் ஒரு கவிதைத் தொடக்க வரி! அப்படித்தான் இருந்தது மேட்டூர் அணையில் காவிரி நீர் திறப்பதும். பல்லாண்டு காலமாகவே குறித்த நாளான ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட்டதில்லை. ஏதோ நல்வாய்ப்பாக இந்த ஆண்டு வரும் ஜூன் 12 அன்று அணை திறக்குமளவுக்குப் போதிய நீர் இருக்கிறது. தமிழ்நாடு அரசும் ஜூன் 12இல் அணை திறப்பதாக அறிவித்திருக்கிறது.


அதேநேரம், அணை திறக்கும் முன் அரசு செய்து முடித்திருக்க வேண்டிய அத்தியாவசியப் பணி ஒன்று உண்டு. அது காவிரியின் கடைமடைக் கால்வாய் வரையிலும் தூர் வாரும் பணியை ஏற்கனவே நிறைவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் கடைமடை விவசாயியும் பயனடைவார். சொல்லப்போனால், எந்த ஊர் சட்டப்படியும் சரி, சர்வதேச சட்டப்படியானாலும் சரி; கடைமடை விவசாயிதான் காவிரிப் பயனாளிகளில் முதன்மை உரிமையாளர்!


ஆனால் அணையில் போதிய நீர் இருப்பது தெரிந்தும் அ.தி.மு.க. அரசு இந்தத் தூர் வாரும் பணியை ஏற்கனவே செய்து முடிக்கவில்லை. அணை திறக்க 18 நாட்கள் இருக்கும் நிலையில்தான் தூர் வாரும் பணியையே அறிவித்தது. பணியை மேற்பார்வையிட பல்வேறு துறைகளின் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புக் கண்காணிப்புக் குழு ஒன்றையும் நியமித்தது.


சிறப்புக் கண்காணிப்புக் குழுவில் நியமிக்கப்பட்ட இந்த அதிகாரிகளுக்கு தத்தம் துறை சார்ந்த பணிகள் ஏதும் இல்லையா; அந்த அளவுக்கு அரசாங்கம் ஓய்வெடுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறதா எனக் கேட்கத் தோன்றுகிறது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர், நீர்ப்பாசனத்துறை செயலர் உள்ளிட்டவர்களே தூர் வாரும் இந்தப் பணியைக் கண்காணிக்கப் போதுமானவர்கள் என்பதே  பொதுமக்களின் கருத்தாகும்.


அப்படியென்றால் இப்படி ஏன் செய்யப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு, வழக்கமான நடைமுறைதானே இது என்று மிக எளிதாகப் பதில் சொல்லிக் கடந்துபோய்விட முடியாது அரசு. கிட்டத்தட்ட 7 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்தப் பணியை இவ்வளவு குறுகிய காலத்திற்குள் செய்து முடிக்க முடியுமா என்றால் முடியவே முடியாது என்பதுதான் பதில்.
 


அப்படியென்றால் இந்தப் பணியைச் செய்து முடித்துவிட்டதாக படம் காட்டுவதும் பணம் பார்ப்பதும்தான் நோக்கமாக இருக்க முடியும். ஆக, ஒப்புக்காகவே இந்தத் தூர் வாருதல் என்று சொல்லலாம்தானே?


இது ஒருபுறம் என்றால் மறுபுறம் மணல் வாருதல்! மணல் வாருதல் விடயத்தில் சுற்றுச்சூழல் சட்டப்படி முறையான விதிகள் உள்ளன. ஆனால் ஆட்சியாளர்களுக்கு சட்டமாவது, விதிகளாவது?


கல்லணையில் இருந்து திருவையாறு வரை காவிரி வெண்ணாற்றில் மணல் வாரும் பணிக்கு உத்தரவாகியிருக்கிறது. உத்தரவு என்றால் சட்டப்படி அல்ல; சட்ட விரோதமாக!


பல்லாயிரம் கோடிகள் பெருமதியான திட்டம்; ஆனால் பல நூறு கோடிகள் வரும்படி மட்டும் அ.தி.மு.க.வினர் பெறும்படியான திட்டமாக வாய்ச்சொல் மூலமே உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட நிர்வாகமும் கண்ணை மூடிக்கொள்ள வேண்டும்.


இத்திட்டத்திற்குத் தலைமை அ.தி.மு.க.வின் எம்.பி. ஒருவர்தான் என்று சொல்லப்படுகிறது.


திருவையாறு முதல் திருக்காட்டுப்பள்ளி வரையிலும், திருக்காட்டுப்பள்ளி முதல் கல்லணை வரையிலும் மணல் வார அனுமதி. இந்த இரண்டு நபர்களும் அ.தி.மு.க.காரர்கள் இல்லை; ஆனால் அ.தி.மு.க. எம்.பி.க்கு கமிஷனை கறாராக வெட்டிவிட வேண்டும்.


கமிஷன் நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேல் என்று தெரிகிறது. அது பொறுப்பான அ.தி.மு.க. நபர்கள் மூலம் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 300 வண்டிகளும், ஒரு ஜே.சி.பி. பக்கெட்டுக்கு 2,000 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மாவட்ட ஆட்சியர், காவல்துறைத் தலைவர், வட்டாட்சியர், வருவாய் அலுவலர் என இவர்கள் யாரும் கண்டும் காணாதிருக்குமாறும் சொல்லப்பட்டிருப்பதோடு, பிரச்சனைகள் என்று ஏற்பட்டால் ஆளுங்கட்சிக்காரர்களுக்கே சாதகமாக நடந்துகொள்ள அதிகாரபூர்வமற்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறதாம்.


எதற்கும் நேரம் காலம் வேணும் என்பார்களல்லவா; அதன்படி மணல் வார நேரம், இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை. எங்கெல்லாம் மணல் வாருவது? வாய்பிருக்கும் இடங்களிலெல்லாம் தாராளமாக வாரிக்கொள்ளலாம். சரி. காலம்? அதாவது ஜூன் 22 க்குள் அள்ளிவிட வேண்டும்.


என்ன ஜூன் 22 வரை? ஜூன் 12 அணை திறப்பாச்சே?


அதற்குள் மணல் மொத்தத்தையும் வாரிவிட முடியாது; அதானால்தான் கூட 10 நாட்கள். அப்படியால் அரசு ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 12இல் அணை திறக்கப்படாது; நாட்கள் தள்ளிப்போகும் என்றாலும், அதையும் பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் இந்த ஆதரவற்ற விவசாயிகள்.
 

http://onelink.to/nknapp


ஆக, மேட்டூர் அணை திறப்பு என்னும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்: (1) ஒப்புக்காக தூர் வாருதல், (2) சட்டவிரோத மணல் வாருதல்; இப்படிக் கொள்ளையடித்தலையே கொள்கையாகக் கொண்ட அ.தி.மு.க. அரசைத் தூக்கியடிக்கத் தயாராவீர் தமிழக மக்களே, எனக் கேட்டுக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! இவ்வாறு கூறியுள்ளார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.