நெல்லை, விருநகர் பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதாவால் 5 முறை எம்.பி.யாக்கப்பட்டவர். தற்போதும் ஜெயலலிதாவின் தயவால் தான் அமைச்சராக இருக்கிறார். ஜெயலலிதா கொள்ளையடித்த பணத்தில் தான் தினகரன் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார் என பேசுகிறார். அவர் காட்டு இலாகா மந்திரி. அவர் அப்படி தான் பேசுவார்.
அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எந்த மூத்த அ.தி.மு.க. நிர்வாகியும் கூறவில்லை. கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் ஆட்சி நடத்துபவர்கள் சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்படுகிறார்கள். ஆர்.கே.நகர் தேர்தலின் போது என்னை துணைப்பொதுசெயலாளர் என அறிமுகப்படுத்தி, அடுத்து அ.தி.மு.க.வை இவர் தான் கட்டிகாப்பார் என கூறிய எடப்பாடி பழனிசாமி தற்போது மாறுதலாக பேசி வருகிறார். இவ்வாறு கூறினார்.
ADVERTISEMENT
Show comments