Skip to main content

பொதுச்செயலாளராக தினகரன் தேர்வு: குழப்பத்தில் தொண்டர்கள்...

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

 

சென்னையில் உள்ள அமமுக அலுவலகத்தில் அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமமுகவை தேர்தல் ஆணையத்தில் முறையான பதிவு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. 

 

T. T. V. Dhinakaran-sasikala



தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்யப்படுவதற்காக கட்சியின் சட்டத்திருத்தங்கள் உருவாக்கப்பட்டன. கட்சியின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆலோசனைகளும் நடந்தன. 

 

கட்சியினுடைய சட்ட விதிகள் உருவாக்கப்பட்டு இன்னும் இரண்டு வாரத்திற்குள் தேர்தல் ஆணையத்தில் கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்குரிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. கட்சியின் தலைவராக சசிகலாவை கொண்டு வரலாமா என்ற ஆலோசனையும் நடந்ததுள்ளது. ஆனால் சசிகலாவின் ஆலோசனைப்படி இதனை செய்கிறாரா, இல்லை தன்னிச்சையாக இதனை செய்கிறாரா என்ற சர்ச்சையும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

 

இதுகுறித்து விசாரித்தபோது, புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுவதையடுத்து, டிடிவி தினகரன் இனி அதிமுகவை சொந்தம் கொண்டாட முடியாது. அதிமுகவின் உரிமை கோரும் வழக்கு தலைமை தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கை சசிகலா தொடர்ந்து நடத்துவார் என அமமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி” - டி.டி.வி. தினகரன் உறுதி

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
tTV Dinakaran confirmed for AMmK alliance with BJP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

இதற்கிடையே பா.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. இணைய இருப்பதாகவும், அதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், திருச்சியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “கூட்டணி தொடர்பாக பா.ஜ.க.விடம் கடந்த 6 மாதங்களாக பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே பா.ஜ.க.வுடன் - அ.ம.மு.க. கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது.

பா.ஜ.க. கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அ.ம.மு.க. அளிக்கும். எந்த உறுத்தலும் இல்லாமல் பா.ஜ.க.வுடன் அ.ம.மு.க. கூட்டணி அமைக்கிறது. எங்களது கோரிக்கைகளை ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக கொடுத்துவிட்டோம். பா.ஜ.க.வின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம். தாமரை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று பா.ஜ.க., அ.ம.மு.க.வை நிர்ப்பந்திக்கவில்லை. எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பது குறித்து எல்லாம் பிரச்சனை கிடையாது. எங்களின் தேவை என்ன என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

நிர்பந்திக்கும் பாஜக; தயக்கத்தில் ஓபிஎஸ்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
 Forced BJP; Homeland OPS

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் தீவிரம் காட்டிவரும் நிலையில் அ.தி.மு.க. அதன் கூட்டணிக்காக பாமக, தேமுதிக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுடன் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

மறுபுறம் பாஜக கூட்டணியில் உள்ள தமாக, தமமுக, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேநேரம் டி.டி.வி.தினகரனின் அமமுக, மற்றும் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைக்கவும் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆனால், பாஜக கூட்டணியை உறுதிசெய்யும் முன்னரே ஓபிஎஸ், தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிப்பதாகவும், மூன்றாவது முறையாக மோடியே பிரதமராக வர வேண்டும் என அவருடைய விருப்பத்தை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தி வந்தார்.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவில் தனித்து இருக்கும் ஓபிஎஸ் ஒருவேளை, பாஜக கூட்டணியில் நின்று போட்டியிட்டால் எந்த சின்னத்தில் நிற்பது என்பது தொடர்பான கேள்விகள் எழுந்தது. அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்சுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இரட்டை இலையில் நிற்பது சாத்தியமில்லாதது என்ற நிலை உருவாகியுள்ளது. அதேநேரம் பாஜக ஓபிஎஸ்ஸை தாமரை சின்னத்தில் நிற்க நிர்பந்திப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்போ தாமரையில் நிற்க மறுப்பு தெரிவித்ததால் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.