Skip to main content

ராஜினாமா செய்கிறார் டி.டி.வி.தினகரன்? 

Published on 18/12/2018 | Edited on 18/12/2018
T. T. V. Dhinakaran



 

பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவை சந்தித்த இரண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், டி.டி.வி.தினகரனை பற்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதனர். அதைத்தொடர்ந்து இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா, இன்னொரு மகள் ஷகிலா, அவரது கணவர் ராஜராஜன், நடராஜன் தம்பி பழனிவேல் ஆகியோர் சசிகலாவை சந்தித்தனர். 

சசிகலா சொன்ன மூன்று வேலைகளை தினகரனிடம் சொல்லியும், தினகரன் தட்டிக்கழித்ததை விவேக் சொல்லியுள்ளார். ஜெ. ஆட்சிக் காலத்தில் கடலூர் பகுதிக்கு பொறுப்பாளராக இருந்த நடராஜனின் தம்பி பழனிவேல், அந்த பகுதிகளில் அமமுகவில் நடைபெறும் குளறுபடிகளை வர்ணித்ததோடு, சசிகலாவின் தம்பி திவாகர், அவரை சந்தித்தையும், பழனிவேலிடம் திவாகர் கொடுத்த திட்டத்தையும் எடுத்து சொன்னார்.

 

இளவரசியின் மகள்கள், அமமுகவில் இருப்பவர்கள் பலர் அதிமுகவில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றும், அமமுக பிரமுகர்கள் பலரை திமுக வலைக்க திட்டமிட்டிருப்பதாகவும் மொத்தத்தில் அதிமுகவும், திமுகவும் அமமுகவை எளிதில் அழித்துவிடும். அதற்கு முக்கிய காரணம் தினகரன் மற்றும் அரவது மனைவி அணுராதா ஆகியோரின் செயல்பாடுகளே என விளக்கியுள்ளார்கள்.

இந்த சந்திப்புகளுக்கு நடுவில் தினகரனை வெளியே இருக்க சொன்ன சசிகலா, கடைசியில் தினகரனை பார்த்தார். அவரை, அவரது பதவி ஆசையையும், செயல்பாடுகளையும் பற்றி காரசாரமாக திட்டியதோடு, திவாகர் கொடுத்து அனுப்பிய மெசேஜ் பற்றியும் எடுத்து சொல்லியுள்ளார்.
 

 

சசிகலா சந்திப்புக்கு பிறகு மிக மிக இறுக்கமான முகத்துடன் வெளியே வந்தார் தினகரன். தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, என்னையும், எனது மனைவி அணுராதாவையும், தாறுமாறாக திட்டுகிறார் சசிகலா. இவர் இப்படி திட்டுவார் என்று எனக்கு தெரியும். அதனால்தான் எப்பொழுதும் என் மனைவியுடன் வந்து சசிகலாவை சந்திக்கும் நான், இந்த முறை மனைவியை அழைத்து வரவில்லை என்று பதில் சொல்லியிருக்கிறார். 

 

 

தினகரனை துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை சசிகலாவிடம் அவர்களது உறவினர்களாலேயே முன் வைக்கப்பட்டதை அறிந்த தினகரன், ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறார் என்கிறது அமமுக வட்டாரங்கள். 
 

 

 

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.

Next Story

கர்நாடக மாநில அதிமுக செயலாளர் ராஜினாமா; இ.பி.எஸ். மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Karnataka State ADMK Sec Resigns EPS Allegation of sensationalism 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் தனது பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “எம்.ஜி.ஆர். ரசிகர்கள் மிகவும் நொந்து போய் இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் அதிமுக பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் படத்தை மட்டும் பெரிதாக வைத்துக் கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர். படத்தை ஸ்டாம்ப் ஸைசில் வைத்துக் கொண்டிருக்கிறார். இது போன்று வேறு யாராவது வைத்திருந்தால் கூட பரவாயில்லை. எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலை சின்னத்தைப் பயன்படுத்தியும், அதிமுக கொடியை பிடித்துக் கொண்டு எம்.ஜி. ஆரை சிறுமைப்படுத்துவது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று ஆகும். ஒவ்வொரு எம்.ஜி.ஆர் ரசிகரும் வேதனையோடும், கொதிப்போடும் இருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் விருப்பமனு கொடுக்கப்பட்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.  கர்நாடக சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் போட்டியிட அனுமதிக்கவில்லை. இவ்வாறு கட்சி தலைமையே கட்சியை அழிக்கும் வேதனைக்குரிய செய்தியை அறிந்த பின்னரும் கர்நாடக மாநில அதிமுக செயலாளர் பதவியில் இருந்து என்ன பயன்” எனத் தெரிவித்தார்.