Skip to main content

'ஆச்சி மசாலுக்கு எதிராக டுவிட்... சிறுபான்மை பேச்சு' மீண்டும் சர்ச்சையில் எஸ்.வி சேகர்..!

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

டிவிட்டரில் ஏதாவது சர்ச்சையான கருத்துக்களை சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர்களில் முதல் இரண்டு இடங்களில் இருப்பவர்கள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் நடிகர் எஸ்.வி சேகர். இதில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர் ராஜா. அடுத்த இடத்தில் இருப்பவர் "பத்திரிக்கையாளர் புகழ்" எஸ்.வி சேகர். இந்நிலையில், ஒரு புகைப்படத்தை பகிர்ந்து நீதி கேட்டுள்ளார்.
 


இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, "#TNGovt #DGP #foodsafety #TNcmo #HighCourt இதற்கு உடனடி தடை நடவடிக்கை உண்டா அல்லது சிறு பான்மை என்று சலுகை கொடுக்கப்படுமா⁉️.   டிவில காட்டினாங்களே அரைக்கிறது, இடிக்கிறது இதெல்லாம் பொய்யா கோபால்" என்று அந்த டுவிட்டில் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க ஜெயிக்காது” - எஸ்.வி. சேகர்

Published on 04/09/2023 | Edited on 04/09/2023

 

 SV Shekhar says BJP will not win in Tamil Nadu until Annamalai is there

 

அண்ணாமலை பா.ஜ.க தலைவராக இருக்கும் வரை தமிழகத்தில் பா.ஜ.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று முன்னாள் எம்.எல்.ஏ.வும், திரைப்பட நடிகருமான எஸ்.வி. சேகர் கூறியுள்ளார்.

 

ஈரோடு மாவட்டம் கோபியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் நடிகர் எஸ்.வி. சேகர் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது இனிமேல் தான் தெரிய வரும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வந்தாலும் 2026 ஆம் ஆண்டு கூட இதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை.

 

அண்ணாமலை பிராமணர்களுக்கு எதிராக அனைத்து விஷயங்களையும் செய்கிறார். அண்ணாமலை இருக்கும் வரை அதிமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை. அதேபோல், தமிழ்நாட்டில் பா.ஜ.க தலைவராக அண்ணாமலை தொடர்ந்து இருந்தால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க வெற்றி பெற வாய்ப்பு இல்லை. காசு கொடுத்து, பிரியாணி கொடுத்து தினமும் 300 பேர் பஸ் ஸ்டாண்ட் வரை நடப்பதால் என்ன மாற்றம் ஏற்படப் போகிறது?

 

அண்ணாமலை தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க முடியாது. அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வில் நான் இருக்க மாட்டேன். அதைப் பற்றி மோடி என்னிடம் கேட்கட்டும். அதற்கு நான் பதில் கூறுகிறேன். அண்ணாமலை போன்றவர்கள் தலைமையில் தனித்து இயங்குவது படு வேஸ்ட். அண்ணாமலை நின்ற தொகுதியிலேயே அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவரும், சீமானும் ஒரே தொகுதியில் நின்றாலும் அவரை விட சீமான் தான் அதிகமான வாக்குகள் பெறுவார். இந்தியாவில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான். தி.மு.க அரசு கொண்டு வந்த காலை உணவுத் திட்டம் மிகவும் வரவேற்கத்தக்க விஷயமாகும்” என்று கூறினார்.  

 

 

Next Story

தமிழிசை வெளியிட்ட அதிரடி லிஸ்ட்...எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கழட்டி விட்ட பாஜக! 

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

இந்தியா முழுவதும் பாஜக கட்சி வளர்ச்சி அடைந்து இருந்தாலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில கூட வெற்றி பெறவில்லை. மேலும் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் ஒரு இடத்தில மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த அனைத்து மாவட்டதிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர். தேர்தல் முடிவுக்கு பிறகு ஊடக விவாதங்களில் பங்கேற்க தமிழக பாஜகவினருக்கு கட்டுப்பாடு விதித்து இருந்தனர். அப்போது தமிழிசை ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

 

bjp



அதில் தொலைக்காட்சியில் நடக்கும் அரசியல் விவாதங்களில் பாஜகவிற்கு சமநிலையும், சமவாய்ப்பும் கொடுக்கப்படுவதில்லை. அதனால் பாஜக பிரதிநிதிகள் யாரும் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்து இருந்தார்.  இந்த நிலையில் ஊடக விவாதகங்களில் பாஜக சார்பாக பங்கேற்போரின் பட்டியலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ளார். அதாவது பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோருக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதோடு, ஊடக விவாதங்களில் பங்கேற்போரின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர். அதில், வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், கே.டி. ராகவன், ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர். சேகர் உட்பட 27 பேர் கே.எஸ். நரேந்திரனால் ஒருங்கிணைக்கப்பட்டு விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லிஸ்டில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.