Advertisment

“முதலமைச்சருக்கான ஆதரவு இரண்டு மடங்காகியுள்ளது”  - அமைச்சர் அன்பில் மகேஷ் 

publive-image

திருச்சி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சி 58வது வார்டு கிராப்பட்டியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தாயாருடன் வந்து வாக்களித்தார்.

Advertisment

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மகேஷ், “மக்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்து வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களின் கோரிக்கைகளும் படிப்படியாக இந்த அரசு நிறைவேற்றும். தேர்தல் நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்பு தான் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அந்தத் தேர்தல் நேர்மையாக நடத்தப்பட்டது. அதே போல தான் இந்தத் தேர்தலும் நேர்மையாக நடத்தப்பட்டது.

Advertisment

ஒரு சில இடங்களில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக திமுகவினரே களமிறங்கியுள்ளனர். அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களால் திமுக வேட்பாளர்களின் வெற்றி பாதிக்கப்படாது. மக்கள் மத்தியில் முதலமைச்சருக்கான ஆதரவு அலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது” என்றார்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe