Skip to main content

தமிழ்நாடு சட்டப்பேரவை இணையதளத்தில் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெயர் நீக்கவில்லை !

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கனகராஜ் அவர்கள் (22/03/2019) அன்று மாரடைப்பால் காலமானார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே உள்ள காலியிடங்கள் 21 ஆக இருந்த நிலையில் , சூலூர் சட்டமன்ற உறுப்பினர் மறைவை அடுத்து தமிழக சட்டப்பேரவை காலியிடங்கள் 22 ஆக உயர்ந்தது. இதனை தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாப்பூர்வமாக அறிவித்தார்.

 

soolur mla name removed

 

ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவை இணையதளத்தில் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் பெயர் நீக்கப்படவில்லை. இதற்கான இணையதள முகவரி :  http://www.assembly.tn.gov.in/default.htm மற்றும் http://www.assembly.tn.gov.in/15thassembly/15thassembly.html  அறியலாம். இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன்  18 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அரவக்குறிச்சி , ஒட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியின் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்தவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

 

mla candidate remove list



அதனை தொடர்ந்து சமீபத்தில் உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கியது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் 2018 ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மீதான வழக்கை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை முடித்து வைக்கத்தது. இதனால் தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சூலூர் சட்டமன்ற தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுடன் சூலூர் சட்டமன்ற தொகுதியையும் சேர்த்து இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிக்கிறது.


பி.சந்தோஷ் , சேலம் .

சார்ந்த செய்திகள்

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.

Next Story

தமிழகம், புதுவையில் முடிந்தது வாக்குப்பதிவு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Polling has ended in Puduvai, Tamil Nadu

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்கு சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.