கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கனகராஜ் அவர்கள் (22/03/2019) அன்று மாரடைப்பால் காலமானார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் ஏற்கெனவே உள்ள காலியிடங்கள் 21 ஆக இருந்த நிலையில் , சூலூர் சட்டமன்ற உறுப்பினர் மறைவை அடுத்து தமிழக சட்டப்பேரவை காலியிடங்கள் 22 ஆக உயர்ந்தது.இதனை தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அதிகாப்பூர்வமாக அறிவித்தார்.

Advertisment

soolur mla name removed

ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவை இணையதளத்தில் சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் பெயர் நீக்கப்படவில்லை. இதற்கான இணையதள முகவரி : http://www.assembly.tn.gov.in/default.htm மற்றும் http://www.assembly.tn.gov.in/15thassembly/15thassembly.html அறியலாம். இந்நிலையில் தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அரவக்குறிச்சி , ஒட்டப்பிடாரம் , திருப்பரங்குன்றம் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதியின் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்தல் நடத்தவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

mla candidate remove list

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதனை தொடர்ந்து சமீபத்தில் உயர்நீதிமன்றம் திருப்பரங்குன்றம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கியது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ் 2018 ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மீதான வழக்கை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வாபஸ் பெற்றதால் நீதிமன்றம் இது தொடர்பான வழக்கை முடித்து வைக்கத்தது. இதனால் தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். இந்த மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்று தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சூலூர் சட்டமன்ற தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுடன் சூலூர் சட்டமன்ற தொகுதியையும் சேர்த்து இந்திய தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிக்கிறது.

Advertisment

பி.சந்தோஷ் , சேலம் .