ADVERTISEMENT

'வெற்றி, தோல்வி சகஜம்... நமக்கான காலம் நிச்சயம் வரும்' - விஜயகாந்த் ஆறுதல்!

12:16 PM Oct 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் (12/10/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கிய நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்த உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்த கட்சிகள் தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக்களை அறிக்கை வாயிலாக தெரிவித்துவருகின்றனர். “திமுக புறவாசல் வழியாக இந்த வெற்றியைப் பெற்றுள்ளது. திமுகவின் புறவாசல் வெற்றியை சட்டத்தின் முன்னும், ஜனநாயகத்தின் முன்னும் வெளிப்படுத்துவோம்” என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அக்கட்சியின் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உண்மை, உழைப்பு, நேர்மையை நம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். அதிகார பலம், பணபலம் ஆகியவற்றை மீறி தேர்தலில் நின்றோம். வெற்றி, தோல்வி சகஜம். நமக்கான காலம் நிச்சயம் வரும்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT