'வெற்றி, தோல்வி சகஜம்... நமக்கான காலம் நிச்சயம் வரும்' - விஜயகாந்த் ஆறுதல்!

dmdk

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் (12/10/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கிய நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்தஉள்ளாட்சித்தேர்தலைச்சந்தித்த கட்சிகள்தேர்தல் முடிவுகள் தொடர்பான கருத்துக்களை அறிக்கைவாயிலாக தெரிவித்துவருகின்றனர். “திமுக புறவாசல் வழியாக இந்தவெற்றியைப்பெற்றுள்ளது. திமுகவின்புறவாசல்வெற்றியைசட்டத்தின்முன்னும், ஜனநாயகத்தின் முன்னும் வெளிப்படுத்துவோம்” என அதிமுகதலைமை தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அக்கட்சியின் தொண்டர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உண்மை, உழைப்பு,நேர்மையைநம்பி நாம் தேர்தலை எதிர்கொண்டோம். அதிகார பலம், பணபலம்ஆகியவற்றைமீறி தேர்தலில் நின்றோம். வெற்றி, தோல்வி சகஜம். நமக்கான காலம் நிச்சயம் வரும்” என தெரிவித்துள்ளார்.

alt="udanpirape" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1420e73a-4d79-49c0-9144-1ca32fd1f594" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/udanpirappe-article-inside-500x300_64.jpg" />

dmdk local body election vijayakanth
இதையும் படியுங்கள்
Subscribe