Skip to main content

மாமா பொண்ணு, அத்தை பொண்ணு மாதிரி... திருநாவுக்கரசர் பேட்டி

Published on 19/02/2019 | Edited on 19/02/2019


 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவரிடம், அதிமுக - பாமக இடையே திடீரென பேச்சுவார்த்தை நடந்து கூட்டணி உடன்பாடு முடிந்துவிட்டது. காங்கிரஸ் - திமுக கூட்டணி இடையே நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடந்தும் இறுதி முடிவு எடுக்க காலதாமதம் ஏற்படுகிறது. கூட்டணியில் ஏதாவது பிரச்சனை உள்ளதா? என்ற கேள்விக்கு,

 

su thirunavukkarasar


அதிமுக - பாஜக - பாமக கூட்டணி என்பது கட்டாய கல்யாணம், திடீர் கல்யாணம். நேற்று வரை இங்கு பேசியவர்கள் இன்று அங்கு சென்றுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் - திமுக உறவு அப்படியில்லை. மாமா பொண்ணு, அத்தை பொண்ணு மாதிரி. எங்கள் கூட்டணி பேச்சுவார்த்தை சமூகமாக நடைபெறுகிறது. எந்த பிரச்சனையும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து கட்சி தலைமை அறிவிக்கும். 40 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அறிவுரை வழங்கினார். தேர்தல் பிரச்சாரத்திற்கு ராகுல்காந்தி தமிழகம் வருவார். பிரியங்கா காந்திக்கும் அழைப்பு விடுப்போம். அதிமுக - பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல். யார் ஏறினாலும் மூழ்குவார்கள். இவ்வாறு கூறினார். 
 

 

சார்ந்த செய்திகள்