/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anna_3.jpg)
ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த மூத்த அரசியல் தலைவர் கலைஞர் வயது மூப்பின் காரணமாக கடந்த சில மாதங்களாக உடல் நலிவடைந்து போய் உள்ளார். அதிலும் கடந்த சில தினங்களாக உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்சி பேதமின்றி அனைத்துக்கட்சி தலைவர்களும் காவேரி மருத்துவமனை வந்து நலம் விசாரித்து சென்றனர். இந்நிலையில் கலைஞரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிவித்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
கலைஞரின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என்றும், தொண்டர்களின் இத்தகையை கோரிக்கையை அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் கலைஞரின் உடலை நல்லடக்கம் செய்ய ஸ்டாலின் தரப்பில் இருந்தும் அனுமதி கோரப்பட்டுள்ளது. முதல்வர் ஈபிஎஸ் , துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், டிடிவி தினகரனும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், அதிமுகவின் சீனியர் அமைச்சர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மூத்த அமைச்சர்கள் முட்டுக்கட்டை போட்டதால் இந்த பிரச்சனை இழுபறியில் இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)