Skip to main content

அதிரடி அரசியலைத் துவக்கிய மு.க.ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடி டீம்!

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

 

அதிமுக - பாஜக கூட்டணியில் தே.மு.தி.க. இணையும் என்கிற எதிர்பார்ப்பில் இருந்ததால் தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வரும் யோசனை ஸ்டாலினுக்கு இருக்கவில்லை. பாமகவிடம் மட்டுமே ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியபடி இருந்தனர். பேரங்கள் படியாத நிலையில் அதிமுக பக்கம் தாவியது பாமக. அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததை அடுத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு உருவானது. 
 

பாஜகவும் அக்கூட்டணியில் இணைந்ததை அடுத்து அதிமுக கூட்டணிதான் வலிமையானது என்கிற தோற்றம் உருவானது. மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவை கொண்டு வர விஜயகாந்தை சந்தித்து பேசியது பாஜக தலைமை. விஜயகாந்தின் உடல்நலன் கருதி அவரை சிரமப்படுத்துவதை தவிர்த்து பிரேமலதாவிடமும், சுதீசிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் பாஜக மூத்த தலைவர் பியூஸ் கோயல். 

 

dmdk-bjp


அப்போது பல்வேறு புள்ளிவிபரங்களைச் சுட்டிக்காட்டி விட்டு தங்களுக்கான டிமாண்ட்டை முன்வைத்த பிரேமலாதா, "பாமகவை விட அதிக வலிமை கொண்ட கட்சி தேமுதிக. அவர்களுக்கு வட தமிழகத்தில் மட்டும்தான் கட்டமைப்பு உள்ளது. ஆனா, தேமுதிகவுக்கு தமிழகம் முழுவதும் வலிமையான கட்டமைப்பு இருக்கிறது. அதனால், 8 லோக்சபா சீட்டும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் வேண்டும். பாமகவிற்கு தேர்தல் நிதி தந்தது போல எங்களுக்கும் 500 சி தரப்பட வேண்டும் " என கோரிக்கை வைத்தார். 
 

அதை கேட்டு மிரண்டு போனார் பியூஸ்கோயல். அங்கிருந்தபடியே அமைச்சர் தங்கமணியை தொடர்புகொண்டு விவாதித்துவிட்டு, " அதிமுக தரப்பில் 3 சீட்டுகள் மட்டுமே ஒதுக்க முடியும் என சொல்கின்றனர். ராஜ்யசபா சீட் கிடையாது. அதற்கு பதிலாக உள்ளாட்சி தேர்தலில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் " என தெரிவித்திருக்கிறார்.

 

dmdk-congress

 

இதனை ஏற்க மறுத்த பிரேமலதாவும் சுதீசும் இறுதியாக, "8 சீட்டிலிருந்து ஒன்றை குறத்துக் கொள்கிறோம். 7 சீட்டும், 500 சி யும் எனில் ஓ.கே.! அதே சமயம் , அதிமுக மேடைகளில் ஏறமாட்டோம். இடைத்தேர்தல் தொகுதியில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யமாட்டோம். பாஜகவுடன் தான் எங்களுக்கு கூட்டணி " என கறாராக தெரிவித்திருக்கிறார்கள். இதில், பியுஸ்கோயலுக்கே உடன்பாடில்லை. உடனே, தேமுதிக தலைமையின் விருப்பத்தை அதிமுக தலைமைக்கு பியூஸ்கோயல் தெரிவித்த போது, " போகாதா ஊருக்கு வழி கேட்கிறார்கள். அவர்களது டிமான்டுகளை ஏற்பது சாத்தியமல்ல. தேமுதிகவை விட்டுவிடுவோம்" என அழுத்தமாக தெரிவித்துவிட்டார் எடப்பாடி. 
 

இந்த நிலையில்தான், " உங்களின் எதிர்பார்ப்பு மிரட்சியாக இருக்கிறது. 3 சீட் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். தேர்தல் செலவுகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மற்றபடி உங்கள் முடிவு" என சுதீசிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டார் பியூஸ் கோயல். இதனால் அப் செட்டானார் பிரேமலதா. அப்போது, திமுக கூட்டணி குறித்து யோசித்தனர். திமுகவின் மனநிலையை அறிந்துகொள்ள திருநாவுக்கரசை அழைத்தார் சுதிஷ். அதன்பேரிலேயே விஜயகாந்தின் உடல்நலத்தை விசாரிப்பதற்காக சென்றார் திருநாவுக்கரசர். 
 

விஜயகாந்தை சந்தித்துவிட்டு திரும்பிய  திருநாவுக்கரசர், சந்திப்பின் விபரங்களை திமுக தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து , கட்சியின் மூத்த தலைவர்களிடம் விவாதித்திருக்கிறார் ஸ்டாலின். அந்த விவாதத்தில் , " தேமுதிகவை நம் பக்கம் கொண்டு வரலாம் " என பலரும் கருத்துக்களை வெளிப்படுத்திய நிலையில், விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ஸ்டாலின். 

 

stalin-vijayagath-dmk-dmdk


விஜயகாந்துடனான ஸ்டாலினின் சந்திப்பு அதிமுக தரப்புக்கு கிலியை உருவாக்கியிருக்கிறது. இந்த சந்திப்பு குறித்து தேமுதிக தரப்பில் விசாரித்தபோது, " கூட்டணி குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 லோக்சபா ஒதுக்கியிருப்பதால் அதே எண்ணிக்கையை கேட்டுள்ளோம். திமுக தரப்பில் 4 சீட்டுக்கு ஓகே சொல்லியிருக்கிறார்கள். அதேசமயம், காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டு இறுதி முடிவை தெரிவிப்பதாக சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஒரு வேளை , காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்ட 10 சீட்டில் ஓரிரு  சீட்டுகளை விட்டுத்தருமாறு கேட்டு அதனையும் சேர்த்து எங்களுக்கு  தரலாம் என திமுக திட்டமிடுவதாக தெரிகிறது " என்கின்றனர்.


இதற்கிடையே, தேமுதிகவை வளைக்க திமுக எடுத்து வரும் முயற்சியில் அதிர்ச்சியைடைந்திருக்கும் எடப்பாடி, தற்போது 5 சீட்டுகள் தருகிறோம் என தேமுதிக தலைமைக்கு தகவல் அனுப்பியபடி இருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.